முந்தைய இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள் கிடைத்தது என்றும், இந்த முறை வெற்றியின் மூலம் அது தொடரும் எனவும் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. தாராபுரம் சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கலந்து கொண்டு பிற மொழி பேசும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது என கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், பரப்புரை மற்றும் பேச்சின் இடையே பஜனை பாடுவது தனது ஸ்டைல் என கூறி ஓம் நமசிவாய பாடலை பாடினார்.
















