சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
111வது சென்னை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்ற அவர், அலுவலகத்தில் கோப்பில் கையெழுத்திட்டு தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.
1991ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்த அபின் தினேஷ் மோதக், காவல்துறை நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஆவார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, முந்தைய காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்ட நிலையில், அபின் தினேஷ் மோதக் புதிய காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பு, 2024ஆம் ஆண்டு தாம்பரம் காவல் ஆணையாளராக பணியாற்றிய அவர், பின்னர் மாநில குற்ற ஆவண காப்பகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றினார். மேலும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
















