பாஜக VS NOTA : இந்துாரில் சுவாரஸ்ம்!
Jun 14, 2026, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக VS NOTA : இந்துாரில் சுவாரஸ்ம்!

Murugesan M by Murugesan M
May 10, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில், அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும் சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான் இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் தேர்தல் களம் மாறியிருக்கிறது. என்னதான் நடந்தது அந்த தொகுதியில் என்பது பற்றி பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் , மொத்தமுள்ள 29 தொகுதிகளில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகர் என்று சொல்லப்படும் இந்தூர் தொகுதி மிக முக்கியமான தொகுதியாகும் . 8 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தூர் தொகுதி கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. மக்களவையின் சபாநாயகராக இருந்த பாஜகவின் சுமித்ரா மகாஜன் இங்கே 8 முறை தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்துளளார்.

2019 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜகவின் ஷங்கர் லால்வானி 5.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பங்கஜ் சங்வியைத் தோற்கடித்தார். 25.13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தூரில் இந்த முறையும் பாஜக சார்பில் லால்வானி போட்டியிடுகிறார்.

திடீர் திருப்பமாக, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 29ஆம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் போட்டியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .

இது காங்கிரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. என்ன செய்வதென்று தெரியாத காங்கிரஸ் , வாக்குப்பதிவின் போது நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தன் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

நோட்டாவுக்கு வாக்களிக்க ஒட்டிய விளம்பரத்தை பாஜக கவுன்சிலர் சந்தியா யாதவ் கிழித்ததைத் தொடந்து அவர் மீது காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. ஆனால் அவரோ , ‘மனசாட்சியுள்ள குடிமகனாக இருக்க வேண்டிய கடமையைத் தாம் நிறைவேற்றியதாகவும், நோட்டாவை விளம்பரப்படுத்தும் போஸ்டரை ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து அகற்றியதாகவும் தெரிவித்தார் .

தேர்தலில், நோட்டாவுக்கு வாக்களிக்க சொல்வது, ஜனநாயக குற்றம் என்று கூறிய மத்திய பிரதேச பாஜக தலைவர் வி டி சர்மா, ‘25.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்தூரில் இந்த முறை பாஜக 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாநகராட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் இந்தூர் வாக்காளர்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ள நிலையில், ஊழல்வாதிகள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள் என்றும், நீங்கள் தேச நலனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பாஜகவும் பதிலுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP VS NOTA : Interesting in Indore!
ShareTweetSendShare
Previous Post

என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது? ஊட்டச்சத்து நிறுவனம் பரிந்துரைகள்!

Next Post

தாய்நாட்டிற்கு பணம்: முதலிடத்தில் இந்தியர்கள்!

Related News

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies