சா 'தீ' யால் சீரழியும் நெல்லை - இளம் குற்றவாளிகளாக மாறும் மாணவர்கள்!
Aug 19, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சா ‘தீ’ யால் சீரழியும் நெல்லை – இளம் குற்றவாளிகளாக மாறும் மாணவர்கள்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி கல்லூரிகளில் அதிகரிக்கும் சாதிய ரீதியிலான மோதல்கள் என சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்பட்ட பகுதி சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவரும் நெல்லை மாவட்டம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏராளமான கல்லூரிகள், எண்ணிலடங்கா கல்வி நிறுவனங்கள் என தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என சொல்லும் அளவிற்கு இருந்த நெல்லை பாளையங்கோட்டை பகுதி, தற்போது கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், சாதிய மோதல் என ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவருகிறது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சக மாணவர்களாலே தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னதுரையில் தொடங்கி, கடந்த சில தினங்களுக்கு முன் புத்தகப் பையில் அரிவாளை கொண்டு வந்த மாணவன் வரை அடுத்தடுத்து அரங்கேறக்கூடிய நிகழ்வுகள் பதபதப்பை ஏற்படுத்துகின்றன.

அதிகளவிலான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தொடர்ந்து நடைபெறக்கூடிய சாதி ரீதியிலான மோதல் சம்பவங்கள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் மாணவரை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள், கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர்கள் என மாணவர்களுக்கு நல்வழியை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே தவறான பாதைக்கு அழைக்கும் நிகழ்வுகள், பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பல வல்லுநர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய நெல்லை மாவட்டம் தற்போது ஜாதி ரீதியிலான மோதல் சம்பவங்களை ஊக்குவித்து வருவது வேதனைக்குரியது என்கின்றனர் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கிடையே நிலவும் மோதல் சம்பவங்களில் அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளிகளுக்குள் அதிகரிக்கும் சாதிய, மோதல்களை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே வருங்கால தலைமுறையை சிறந்த தலைமுறையாக உருவாக்க ஒரே தீர்வாக அமையும்.

Tags: educational institutestirunelvelilaw and orderpalayamkottaiOxford of South India
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா – காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

Next Post

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் பலி!

Related News

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies