ஆக்கிரமிப்பு அகற்றமா? விதிமீறலா? அகதிகளான அவலம், கதறி துடிக்கும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றமா? விதிமீறலா? அகதிகளான அவலம், கதறி துடிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 23, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆக்கிரமிப்பு எனும் பெயரில் திருவேற்காடு பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்தும் வரும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ளது. முன்னறிவிப்பின்றி 25க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இது தொடர்பான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட இடம் தான் இந்த கோலடி பகுதி. செல்லியம்மன் நகர், அன்பு நகர் மற்றும் முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்த சூழலில் கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அனைத்து குடியிருப்புகளிலும் நீர்வளத்துறையின் மூலம் கடந்த 15ம் தேதி ஒட்டப்பட்ட நோட்டீஸ் பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நோட்டீஸை தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி 25க்கும் அதிகமான வீடுகள் ஜேபிசி இயந்திரங்களின் மூலம் இடிக்கப்பட்டதால், தன்னுடைய வீட்டையும் இடித்துவிடுவார்கள் என மன உளைச்சலுக்குள்ளான தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தச்சுத்தொழிலாளியின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஆக்கிரமிப்பு எனும் பெயரில் வீடுகளை இடிக்கும் பணிகளை நிறுத்தக்கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத காலத்தில் குடியேறிய தங்களுக்கு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை வழங்கியதோடு, பல்வேறு விதமான வரிகளையும், கட்டணங்களையும் வசூலித்துக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம் தங்களை வெளியேற்றத் துடிப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.

சொந்த வீடு எனும் கனவில் பல ஆண்டுகளாக உழைத்து பணம் சேர்த்து பார்த்து பார்த்து கட்டிய வீடு தங்களின் கண்முன்னே இடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என அப்பகுதி மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வேறு ஏதாவது வணிக கட்டடங்களை கட்ட அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தையும் குடியிருப்புவாசிகள் எழுப்பியுள்ளனர்

எனவே, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்துவரும் தங்களை ஆக்கிரமிப்பு எனும் பெயரில் அகதிகளாக்கும் தமிழக அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

 

Tags: Muthamizh Nagarencroachent issuehouses demolishedThiruverkadoo MunicipalitySelliyamman NagarAnbu Nagar
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த போதும் காணிக்கை வருவாய் உயர்வு!

Next Post

ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தல் – 5 தொகுதிகளில் பாஜக வெற்றி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies