மதுரை மேயர் தேர்வு எப்போது? : சுகாதார சீர்கேட்டால் அவதி - குமுறும் மக்கள்!
Jul 29, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மேயர் தேர்வு எப்போது? : சுகாதார சீர்கேட்டால் அவதி – குமுறும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வது தள்ளிப் போவதால், திட்டப் பணிகள் முடங்கிப் போய், மாநகரத்தில் எந்தப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையின் முக்கியப் பிரச்சனையாகச் சுகாதாரக் கேடு உருவெடுத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

அண்மையில் சொத்து வரி வசூலில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது வெட்ட வெளிச்சமானதால், மத்திய குற்றப்பிரிவு தனது பிடியை இறுக்கியது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த். மண்டல தலைவர் கணவர் கண்ணன், உதவி ஆணையர் உள்ளிட்ட 23 பேரை கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிரந்தர அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் எனக் கைதானவர்களில் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனம் காரணமாக ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு குழுத் தலைவர்கள் ராஜினாமா.

மாநகராட்சி மேயர் இந்திராணி பதவி விலகினார். நிலைமை இப்படியிருக்க ஒரு மாதத்தைக் கடந்தும் புதிய மேயரை தேர்வு செய்யாதது மதுரை மாநகராட்சி பணிகளை முடக்கியுள்ளது. புதிய மேயர் தேர்வு தள்ளிப் போவதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பணிகள், குடிநீர், கழிவுநீர், குப்பைகள் அகற்றும் பணிகள், புதிய திட்டங்கள் செயல்படுத்துதல் என எதுவும் நடைபெறவில்லை.

குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகக் குமுறுகிறார்கள் உள்ளூர்வாசிகள்… தூங்கா நகரம், கோவில் மாநகரம், திருவிழா நகரம் கலாசார நகரம் எனப் பல்வேறு சிறப்புகளை பெற்ற மதுரை மாநகரம் தற்போது குப்பை மாநகரம் மாறி விட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மதுரைவாசிகள்.

அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி உள்ளிட்டோர் தங்களுக்கு ஆதரவான ஒரு நபரை மேயராகத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தி வரும் நிலையில், திமுகவுக்குள் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடி வருகிறது.

எனவே புதிய மேயரை உடனடியாகத் தேர்வு செய்து, சுகாதார சீர்கேட்டைக் களைய தமிழக அரசும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Tn newsWhen is the Madurai mayoral election?: People are worried about health problemsமதுரை மேயர் தேர்வு எப்போது?
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் நடுநிலையாகச் செயல்படுவதில்லை – அண்ணாமலை

Next Post

பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை வழக்கில் திருப்பம் : கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies