ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - புதிய மருந்தை கண்டுபிடித்த அயர்லாந்து நிறுவனம்!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – புதிய மருந்தை கண்டுபிடித்த அயர்லாந்து நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்களின் நீண்டகால பிரச்னையாக உள்ள தலைமுடி வழுக்கைக்கு அயர்லாந்து தனியார் நிறுவனம் ஒரு நிரந்தர தீர்வை கண்டுபிடித்துள்ளது. பலர் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் அந்தத் தீர்வு என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

உலகளவில் பெருவாரியான ஆண்களுக்கு Androgenic alopecia என்னும் தலைமுடி வழுக்கை என்பது நீண்டகால பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பொதுவாக 20 முதல் 30 வயதில் ஆண்களுக்கு ஆரம்பமாகும் இந்தப் பிரச்னை, முதலில் தலையோரங்களில் தொடங்கி நாளடைவில் தலைமுடி வரிசையை ‘M’ அல்லது ‘U’ வடிவில் குறைக்கிறது.

இதன்மூலம் இறுதியாகத் தலையின் மேற்பகுதி முழுவதும் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை என்னும் நிலையை அடைகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இதற்கு முன் பல நிறுவனங்கள் பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்து அவற்றை சந்தைப்படுத்தியுள்ளன. இருப்பினும் அந்த மருந்துகள் எதுவும், இந்த பிரச்னைக்கு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்தச் சூழலில், அயர்லாந்தைச் சேர்ந்த Cosmo Pharmaceuticals என்ற தனியார் நிறுவனம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இதற்கான ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அந்த நிறுவனம், ஆக்னே சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ‘Glascotteron’ மருந்தைத் தலைமுடி வளர்ச்சிக்கான தங்களது ஆய்வில் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆய்வில் சுமார் ஆயிரத்து 500 ஆண்களை இரு குழுக்களாகப் பிரித்துக்கொண்ட அந்நிறுவனம், அவர்களிடம் மூன்று கட்டங்களாக இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது.

இந்தப் பரிசோதனையின்போது ஒரு குழுவினருக்கு எப்போதும் வழங்கப்படும் சாதாரண சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னொரு குழுவினருக்கு ‘Glascotteron’ மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் ‘Glascotteron’ மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட குழுவினர், 168 சதவீதம் முதல் 539 சதவீதம் வரை தலைமுடி வளர்ச்சி பெற்றிருந்தனர்.

மேலும், இந்த மருந்தைப் பயன்படுத்திய குழுவினருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், அவர்களின் உடல்நிலை மருந்தைச் சீரான முறையில் ஏற்றுக்கொண்டதாகவும் Cosmo Pharmaceuticals நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து தொடர்ந்து வேலை செய்தால், ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்கு இது நிரந்தர தீர்வாக அமையும் என Cosmo Pharmaceuticals நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜியோவானி டி நபோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துக்கு வரும் ஆண்டில் அமெரிக்காவின் FDA அமைப்பு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இது ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்குக் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட புதிய மருந்தாக இருக்கும் எனத் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து தலைமுடி வழுக்கையால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தில் உள்ள பல ஆண்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Irish company discovers new drug: A permanent solution to male pattern baldnessஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னை
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பாகிஸ்தானிய குண்டர்கள் : நாடு கடத்த பிரிட்டன் முயற்சி – முனீர் எதிர்ப்பாளர்களை ஒப்படைக்க பாக். நிபந்தனை!

Next Post

முறிந்த அமைதி ஒப்பந்தம்? : கம்போடியா மீது தாய்லாந்து விமான தாக்குதல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies