சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பாகிஸ்தானிய குண்டர்கள் : நாடு கடத்த பிரிட்டன் முயற்சி - முனீர் எதிர்ப்பாளர்களை ஒப்படைக்க பாக். நிபந்தனை!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பாகிஸ்தானிய குண்டர்கள் : நாடு கடத்த பிரிட்டன் முயற்சி – முனீர் எதிர்ப்பாளர்களை ஒப்படைக்க பாக். நிபந்தனை!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பிரிட்டனில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள இங்கிலாந்துக்கு ஒரு புதிய திட்டத்தைப் பாகிஸ்தான் அரசு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள புதிய திட்டம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இங்கிலாந்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் வம்சாவளியினரின் நெட்வொர்க் இருப்பதாக அந்நாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப் பட்டுள்ளது. 1990ம் ஆண்டுகளில் இருந்தே இந்த நெட்வொர்க்கில் உள்ள பாகிஸ்தான் ஆண்கள், நீண்டகாலமாகவே வெள்ளை மைனர் சிறுமிகளைக் குறிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ரோதர்ஹாம், ரோச்டேல், ஓல்ட்ஹாம் மற்றும் டெல்ஃபோர்ட் போன்ற நகரங்களில் சிறுமிகள் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஒரே இரவில் 40 பாகிஸ்தான் ஆண்களால் சீரழிக்கப்பட்ட சிறுமியின் கதை பாகிஸ்தானியர்களின் பாலியல் வன்கொடுமைக்குச் சான்றாக உள்ளது. இங்கிலாந்தில் நடந்த இது போன்ற பாலியல் மோசடி மற்றும் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கையின் அளவு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2012ம் ஆண்டுக்கு முன் இது தொடர்பான வழக்கு நடந்து தீர்ப்பும் வழங்கப் பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாலியல் குற்றவாளிகளான பாகிஸ்தானியர்களை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப் பட்டு வருகிறது. எனினும், பாகிஸ்தான் குடியுரிமை இல்லாததால் அவர்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி பாலியல் குற்றவாளிகளை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்து விட்டது. கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு உதவும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க நிதியளிப்பதாக உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்திருந்தார்.

மேலும் இதுவரை இரண்டரை லட்சம் வெள்ளையின சிறுமிகள் பாகிஸ்தானியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாகஒரு சட்டப்பூர்வ தேசிய விசாரணைக்குப் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உத்தரவிட்டார். மேலும், காரி அப்துல் ரவூப் மற்றும் அடில் கான் போன்ற இந்தப் பாலியல் வன்முறை கும்பலின் உறுப்பினர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இங்கிலாந்து உயர் ஆணையரை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் பாலியல் குற்றவாளிகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு புதிய திட்டத்தை அரசு தரப்பில் முன் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டு வரும் இரண்டு முக்கிய நபர்களை ஒப்படைப்பதாக இருந்தால், இங்கிலாந்திலிருந்து பாலியல் குற்றவாளிகளை திருப்பி அனுப்புவதை ஏற்றுக்கொள்வதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளரான ஷாஜாத் அக்பர் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக இருந்து அடில் ராஜா ஆகிய இருவரும் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசிடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி வலியுறுத்தியதாகத் தெரியவருகிறது.

இவர்கள் இருவரும் அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் கடுமையாக விமர்சித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் முறையான கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லை. ஆனால், 2003 ஆண்டின் திருத்தப்பட்ட இங்கிலாந்து ஒப்படைப்புச் சட்டத்தின் சிறப்பு பிரிவு தற்காலிக ஒப்படைப்புக்கு அனுமதி அளிக்கிறது.

Tags: pakistanPakistani thugs who sexually abuse girls: Britain tries to extradite them - Pakistan demands handover of Munir's opponentsசிறுமிகளை பாலியல் வன்கொடுமை
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் திலீப் ‘குற்றமற்றவர்’ என தீர்ப்பு : 2017-ம் ஆண்டு நடிகை பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி…!

Next Post

ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – புதிய மருந்தை கண்டுபிடித்த அயர்லாந்து நிறுவனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies