திருப்பரங்குன்றம் தீபத்துாண் பற்றி திமுகவின் பொய் பரப்புரை : அம்பலப்படுத்திய தமிழக அரசின் தொல்லியல் துறை - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்துாண் பற்றி திமுகவின் பொய் பரப்புரை : அம்பலப்படுத்திய தமிழக அரசின் தொல்லியல் துறை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், அதில் காலம் காலமாக தீபம் ஏற்றி வந்திருப்பதை தமிழக அரசின் தொல்லியல் துறை நூல் உறுதிபடுத்தியுள்ளது. மலை உச்சியில் இருப்பது எல்லைக் கல் என திமுகவினர் மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரமும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள், உத்தர காமிக ஆகமம், உத்தரகாரணாஹமம், திருப்பரங்குன்றம் கோயில், வேற்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன. அத்தகைய புத்தகங்களில் யார் தீபம் ஏற்ற வேண்டும் ? எப்போது தீபம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருப்பது தான் தீபத்தூண் எனவும், மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல் தான் எனவும் திட்டமிட்டு பொய் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக தொல்லியல்துறை 1981ம் ஆண்டு வெளியிட்ட குன்றத்து கோயில்கள் எனும் புத்தகத்தில் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கே சென்று பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட பின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கிய பின்பும் தமிழக அரசும், அதன் காவல்துறையும் அதற்கு அனுமதியை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு உச்சி பிள்ளையார் கோயிலில் இருப்பது தான் உண்மையான தீபத்தூண் என்றும், மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல் எனவும் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்குச் சென்றால் அங்கு நாயக்கர் காலத்து தீபத்தூண் ஒன்று இருக்கும் எனவும், அதில் புண்ணியவான்கள் அனைவரும் தீபம் ஏற்றலாம் என தொல்லியல்துறையில் இடம்பெற்றிருக்கும் தகவல் தமிழகத்தில் பரவும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் எங்கு ஏற்ற வேண்டும் என்ற சர்ச்சையில் லண்டன் பிரிவியூ கவுன்சில் முதல் உயர்நீதிமன்றம் வரை பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கும் நிலையில், திமுகவின் ஆரம்பகட்ட நிர்வாகிகள் தொடங்கி அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான் கனிமொழி வரை மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல் தான் என பொய்யான தகவலை பரப்பி வந்தனர்.

அவற்றை தவிடுபொடியாக்கும் வகையில் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஒரு சமூக கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட தீபத்தூணை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என ஆகம நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கார்த்திகை தீபத்திருநாள் அன்று மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு மாறான நாட்களில் தீபம் ஏற்றுவது ஆகமவிதிகளுக்கு எதிரானது என்ற மற்றொரு பிரச்சாரமும் திமுகவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கும் தகுந்த பதிலை ஆகம நிபுணர்கள் கொடுத்துள்ளனர்.

கார்த்திகை முதல் நாளில் இருந்து மாதம் முடியும் வரை எந்தநாளிலும் தீபம் ஏற்றலாம் எனவும், தீபத்தை பக்தர்கள் யார் வேண்டுமானாலும் ஏற்றலாம் எனவும் ஆகம நிபுணர்கள் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.

இப்படியாக நீதிமன்ற தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், தமிழக பக்தர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையிலும் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவோருக்கு தமிழக அரசின் தொல்லியல் துறை புத்தகமே தகுந்த பதிலாக அமைந்திருக்கிறது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் எந்தவித தவறும் இல்லை அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மதுரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் எழுந்து வருகிறது.

Tags: Thiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issue
Share
Tweet
SendShare
Previous Post

முருகா… திமுகவினருக்கு நல்ல புத்தி கொடு – பம்மல் சுப்பரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வழிபாடு!

Next Post

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு – லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங்கிற்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies