ரூபாய் மதிப்பு சரிவால் சாதகங்கள் என்ன? - பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் விளக்கம்!
Jun 15, 2026, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ரூபாய் மதிப்பு சரிவால் சாதகங்கள் என்ன? – பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்திருக்கும் நிலையில், சில சாதகமான சூழல்களும் உருவாகியிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அவை என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரானது 90 ரூபாய் 50 காசுகள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியா – அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக முரண்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. டாலருக்கும், ரூபாய்க்கும் இடையிலான மதிப்பை இந்தியா அல்லது அமெரிக்க அரசுகள் நேரடியாக நிர்ணயிப்பதில்லை. அது முழுக்க முழுக்க சந்தையின் தேவை வழங்கல் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது.

அதாவது டாலரை அதிகமாக வாங்கினால், அதன் விலை உயரும், குறைவாக வாங்கினால் விலை குறையும். இந்தப் பரிவர்த்தனை நடைபெறும் இடமான FOREX-ல், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து, 24 மணி நேரமும் விற்பனையை கண்காணித்து வருகின்றன.

இதன் அடிப்படையில் தான் ஒரு டாலர் எத்தனை ரூபாய் என்ற மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்று டாலராக மாற்றினால் ரூபாய் பலவீனமாகும். அதேவேளையில் இந்தியாவில் முதலீடு செய்ய டாலரை மாற்றி ரூபாய் வாங்கினால், மதிப்பு வலுவடையும். இதில் முதல் சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ரூபாய் மதிப்பு சரிவால் சில சாதகமான சூழல்களும் உருவாகியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சர்வதேச வர்த்தகத்தில் இது நிச்சயம் ஏற்றத்தைத் தான் கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். எப்படி என்று பார்த்தோம் என்றால், தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, ஐவுளி மற்றும் பொறியியல் துறைகளை சார்ந்த நிறுவனங்கள் ரூபாயில் முதலீடு செய்திருந்தாலும், அவர்களுக்கான வருமானம் டாலரில் கிடைக்கும் என்பதால், நிச்சயம் இந்த நிறுவனங்கள் லாபம் காணும் என்பதில் சந்தேகமில்லை.

வெளிநாடுகளில் இந்திய பொருட்களின் விலை குறையும் என்பதால், அவற்றின் தேவை அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்கும் எனச் சாதகமான வாய்ப்பை விவரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். கார்ப்பேரட் நிறுவனங்களின் வருமானம் பெருகி, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வதால், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். பங்குச்சந்தை பங்குகள், நிலம் உள்ளிட்டவற்றை சர்வதேச முதலீட்டாளர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதால், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவியும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், இந்திய வியாபாரிகளுக்கு இது நிச்சயம் வருமானத்தை பெருக்கும் காலம் எனக் கூறுகிறார்கள். டாலர் மதிப்பு உயர்வால் சர்வதேச சுற்றுலா செல்ல அதிக செலவாகும் என்பதால், உள்நாட்டில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களுக்கே மக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றும், இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருமானம் பெருகும் எனவும் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.

சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் லாபம் அடைவதற்கான சூழலே உருவாகியிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்திய வம்சாவளிகள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பத்திற்கு டாலரில் அனுப்பும் பணத்தை, ரூபாயாக மாற்றும் போது, நல்ல தொகை கிடைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

குடும்ப செலவினத்தை சமாளிப்பதற்கும், கடன் சுமையை குறைப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் இது நிச்சயம் உதவும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள், தங்கம் போன்றவற்றின் விலை அதிகரித்தாலும் பாதிப்பை சமாளிப்பதற்கான சூழல்களும் உருவாகி இருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமே.

Tags: indian ruppeeWhat are the benefits of the rupee's depreciation? - Economists explainரூபாய் மதிப்பு சரிவால் சாதகங்கள் என்ன?
ShareTweetSendShare
Previous Post

ஜி-7 ஆதிக்கத்தை குறைக்கிறதா அமெரிக்கா? : ஆசிய நாடுகளின் பக்கம் சாயும் அதிபர் ட்ரம்ப்!

Next Post

சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் – பேரணியில் வன்முறை!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies