சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் - பேரணியில் வன்முறை!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் – பேரணியில் வன்முறை!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாபில் சிந்து தனிநாடு கோரி சிந்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. உண்மையில் என்ன நடந்தது? சிந்து மக்கள் தனி நாடு கோரிக்கையை ஏன் முன்வைக்கிறார்கள் ? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

சிந்து நதி மற்றும் தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள நிலப்பகுதியான சிந்து தற்போது பாகிஸ்தானின் தென்கிழக்கு மாநிலமாக உள்ளது. இப்போது இதன் தலைநகரம் கராச்சியாகும். 30 மாவட்டங்கள் கொண்ட பாகிஸ்தானின் 3வது பெரிய மாகாணமான சிந்துவில் சுமார் ஐந்தரை கோடி மக்கள் வசிக்கின்றனர்.

பெரும்பான்மையாக சிந்தி மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இப்போது 94 சதவீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர். பண்டைய காலத்தில் பரந்த பாரதத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கிய சிந்து, உலகின் முதன்மை நாகரீகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரீக வரலாற்றைக் கொண்டது.

சிந்து நதியின் ஓட்டத்தில் ஐந்து நதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது இந்தச் சிந்து தேசம். அக்னிபுராணத்தில் மட்டுமின்றி இராமாயணத்திலும், மகா பாரதத்திலும் வடக்கில் இமயமலையின் தெற்கே 7 முக்கிய மலைத் தொடர்களைக் கொண்ட குலபர்வதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆரவல்லி மலை தொடரையே பாரியாத்ரம் என்றும் அங்கே சிந்து தேசம் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. முகமது பின் காசிமின் படையெடுப்புக்கு முன் சிந்து மாகாணத்தில் இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். பிரிவினையின் போது, சிந்து நிலப்பகுதி பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக்காலத்தில் லட்சக்கணக்கான சிந்தி குடும்பங்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

கடந்த காலங்களில் சிந்து மாகாணத்தில் வாழும் சிந்தி மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சிந்தி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உருது மொழி திணிப்பு ஒருபுறம் என்றால் சிந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மறுபுறம். இப்படி வாழ முடியாத சூழலில் சிந்தி மக்கள் இந்த மாகாணத்தை விட்டுப் புலம்பெயர்கிறார்கள். மத ரீதியில் சிந்தி மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதால், பாகிஸ்தானில் உள்ள சிந்து மக்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமானது. 1967-ல் முதன்முதலாகச் சிந்து தேசத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மீண்டும் 1971-ல் வங்கதேச பிரிவினைக்குப் பிறகு இந்தக் கோரிக்கை அதி தீவிரமானது. நாடுகடத்தப்பட்ட சிந்தி தலைவர் ஷாஃபி பர்பத் தலைமையிலான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM) என்ற அமைப்பு, ஐநா சபை தலையீட்டு சிந்து தேசத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. “சிந்து பாகிஸ்தான் அல்ல” என்று அறிவித்த ஷாஃபி பர்பத், இந்தப் பகுதியின் பெரும்பான்மை சிந்தி மக்களின் ஒப்புதல் இல்லாமல் இணைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கூடுதலாக, மொத்த வருவாயில் 63 சதவீதத்தை சிந்து மாகாணமே தருகிறது என்றாலும் அதிகாரமெல்லாம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சிந்து தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாரம்பரிய வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகளை மேற்கோள் காட்டி, JSMM தனது தனிநாடு கோரிக்கையை ஆதரிக்குமாறு பிரதமர் மோடியிடமும் வேண்டுகோள் வைத்தது. இந்நிலையில், சிந்து கலாசார தினத்தை முன்னிட்டு சிந்துதேசம் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து கராச்சியில் கடந்த 7ம் தேதி போராட்டம் நடந்தது. பாகிஸ்தான் முர்தபாத் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது சிந்து மக்களின் நீண்ட கால கனவையும் உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. போராட்டத்தின் போது நடந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தினர்.

இந்த வன்முறையில் 5 போலீசார் காயமடைந்தனர். கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் வரலாற்று கலாச்சார ரீதியாக சிந்து பகுதி இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும், எல்லைகள் மாறலாம் என்றும் தெரிவித்ததும், உடனடியாக ராஜ்நாத் சிங்கின் கருத்தை JSMM வரவேற்று அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanIs Pakistan breaking up?: Sindh demands separate state - Violence at rally
ShareTweetSendShare
Previous Post

ரூபாய் மதிப்பு சரிவால் சாதகங்கள் என்ன? – பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் விளக்கம்!

Next Post

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies