சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் - பேரணியில் வன்முறை!
Jul 31, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் – பேரணியில் வன்முறை!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாபில் சிந்து தனிநாடு கோரி சிந்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. உண்மையில் என்ன நடந்தது? சிந்து மக்கள் தனி நாடு கோரிக்கையை ஏன் முன்வைக்கிறார்கள் ? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

சிந்து நதி மற்றும் தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள நிலப்பகுதியான சிந்து தற்போது பாகிஸ்தானின் தென்கிழக்கு மாநிலமாக உள்ளது. இப்போது இதன் தலைநகரம் கராச்சியாகும். 30 மாவட்டங்கள் கொண்ட பாகிஸ்தானின் 3வது பெரிய மாகாணமான சிந்துவில் சுமார் ஐந்தரை கோடி மக்கள் வசிக்கின்றனர்.

பெரும்பான்மையாக சிந்தி மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இப்போது 94 சதவீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர். பண்டைய காலத்தில் பரந்த பாரதத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கிய சிந்து, உலகின் முதன்மை நாகரீகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரீக வரலாற்றைக் கொண்டது.

சிந்து நதியின் ஓட்டத்தில் ஐந்து நதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது இந்தச் சிந்து தேசம். அக்னிபுராணத்தில் மட்டுமின்றி இராமாயணத்திலும், மகா பாரதத்திலும் வடக்கில் இமயமலையின் தெற்கே 7 முக்கிய மலைத் தொடர்களைக் கொண்ட குலபர்வதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆரவல்லி மலை தொடரையே பாரியாத்ரம் என்றும் அங்கே சிந்து தேசம் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. முகமது பின் காசிமின் படையெடுப்புக்கு முன் சிந்து மாகாணத்தில் இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். பிரிவினையின் போது, சிந்து நிலப்பகுதி பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக்காலத்தில் லட்சக்கணக்கான சிந்தி குடும்பங்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

கடந்த காலங்களில் சிந்து மாகாணத்தில் வாழும் சிந்தி மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சிந்தி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உருது மொழி திணிப்பு ஒருபுறம் என்றால் சிந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மறுபுறம். இப்படி வாழ முடியாத சூழலில் சிந்தி மக்கள் இந்த மாகாணத்தை விட்டுப் புலம்பெயர்கிறார்கள். மத ரீதியில் சிந்தி மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதால், பாகிஸ்தானில் உள்ள சிந்து மக்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமானது. 1967-ல் முதன்முதலாகச் சிந்து தேசத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மீண்டும் 1971-ல் வங்கதேச பிரிவினைக்குப் பிறகு இந்தக் கோரிக்கை அதி தீவிரமானது. நாடுகடத்தப்பட்ட சிந்தி தலைவர் ஷாஃபி பர்பத் தலைமையிலான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM) என்ற அமைப்பு, ஐநா சபை தலையீட்டு சிந்து தேசத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. “சிந்து பாகிஸ்தான் அல்ல” என்று அறிவித்த ஷாஃபி பர்பத், இந்தப் பகுதியின் பெரும்பான்மை சிந்தி மக்களின் ஒப்புதல் இல்லாமல் இணைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கூடுதலாக, மொத்த வருவாயில் 63 சதவீதத்தை சிந்து மாகாணமே தருகிறது என்றாலும் அதிகாரமெல்லாம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சிந்து தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாரம்பரிய வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகளை மேற்கோள் காட்டி, JSMM தனது தனிநாடு கோரிக்கையை ஆதரிக்குமாறு பிரதமர் மோடியிடமும் வேண்டுகோள் வைத்தது. இந்நிலையில், சிந்து கலாசார தினத்தை முன்னிட்டு சிந்துதேசம் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து கராச்சியில் கடந்த 7ம் தேதி போராட்டம் நடந்தது. பாகிஸ்தான் முர்தபாத் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது சிந்து மக்களின் நீண்ட கால கனவையும் உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. போராட்டத்தின் போது நடந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தினர்.

இந்த வன்முறையில் 5 போலீசார் காயமடைந்தனர். கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் வரலாற்று கலாச்சார ரீதியாக சிந்து பகுதி இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும், எல்லைகள் மாறலாம் என்றும் தெரிவித்ததும், உடனடியாக ராஜ்நாத் சிங்கின் கருத்தை JSMM வரவேற்று அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanIs Pakistan breaking up?: Sindh demands separate state - Violence at rally
ShareTweetSendShare
Previous Post

ரூபாய் மதிப்பு சரிவால் சாதகங்கள் என்ன? – பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் விளக்கம்!

Next Post

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies