ஆரவல்லி மலைக்கு ஆபத்தா? - மத்திய அரசு கூறுவது என்ன?
Sep 13, 2026, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரவல்லி மலைக்கு ஆபத்தா? – மத்திய அரசு கூறுவது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆரவல்லி மலைத்தொடர் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறைக்குச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த அதிருப்திக்கு காரணம் என்ன? இதுகுறித்து மத்திய அரசு என்ன கூறுகிறது?.. பார்க்கலாம், இந்தச் செய்தி தொகுப்பில்.

உலகின் மிகவும் பழமையான மடிப்பு மலைத்தொடர்களில் ஒன்று, ஆரவல்லி மலை. இது இமயமலையை விடவும் பழமையானது. வடமேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமார் 800 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மலைத்தொடர் நீண்டுள்ளது. பனாஸ், லூனி, சாகர்மதி போன்ற பல நதிகளின் பிறப்பிடமாகத் திகழும் இந்த மலை, தாமிரம், துத்தநாகம், ஈயம், பளிங்கு கற்கள் போன்ற பல வளங்களையும் கொண்டுள்ளது.

தார் பாலைவனம் கிழக்கு நோக்கிப் பரவாமல் தடுப்பதும் இந்த ஆரவல்லி மலைதான். அத்துடன், காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதிலும், நிலத்தடி நீரை பெருமளவில் சேமிப்பதிலும் இந்த மலை முக்கிய பங்காற்றுகிறது. இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால் ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் பச்சை கவசம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த மலைகுறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறை தற்போது முக்கிய பேசுப்பொருளாகியுள்ளது.

100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைகள் மட்டும்தான் ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனக் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இது சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆரவல்லி மலைத்தொடரில் 100 மீட்டர் உயரத்திற்கும் குறைவான பல பகுதிகள் உள்ளன. புதிய வரையறை காரணமாக அவை சாதாரண மலைகளாகக் கருதப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உயரம் குறைந்த பகுதிகளுக்கான பாதுகாப்பு விலக்கிகொள்ளப்படும் பட்சத்தில், அங்கு அதிகளவில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு கனிமவளங்கள் கண்மூடித்தனமாக வெட்டி எடுக்கப்படும் அபாயம் உருவாகும் எனச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் அங்கு வேகமெடுக்க தொடங்கிவிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால், அங்கு வாழும் அரியவகை உயிரினங்கள் இறக்கும் சூழல் உருவாவதுடன், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் Aravalli Bachao அமைப்பைச் சேர்ந்தவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சந்திரமௌலி பாசு, இது ஒரு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அத்துடன், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகள் இனி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, #SaveAravalli என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த அச்சங்கள் தேவையற்றவை என மத்​திய சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் பூபேந்​திர யாதவ் தெரிவித்துள்ளார். ஆர​வல்லி மலைத்​தொடரில் 90% பாது​காக்​கப்​பட்​ட பகுதிகள்தான் எனவும், விரி​வான மேலாண்மை திட்​டம் இறுதி செய்​யப்​படும் வரை புதிய சுரங்க ஒப்பந்தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, ஆர​வல்லி மலை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.

Tags: லூனிசாகர்மதிமத்திய அரசுIs the Aravalli Mountains in danger? - What does the central government say?ஆரவல்லி மலைபனாஸ்
Share
Tweet
SendShare
Previous Post

பொய் புகாரால் பலியான இந்து இளைஞர் – விசாரணையில் பகீர் தகவல்!

Next Post

இந்துக்களுக்கு எதிரான வன்முறை : பாக்.கின் பகடை காயாக மாறிய வங்கதேசம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies