ஆடி மாதத்தில் நல்ல காரியம் செய்யலாமா? கூடாதா ?
Sep 16, 2025, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

ஆடி மாதத்தில் நல்ல காரியம் செய்யலாமா? கூடாதா ?

Web Desk by Web Desk
Jul 14, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுவாக ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள் ஆடி போய் ஆவணி வந்தால் தான் எல்லாம் நடத்த வேண்டும் என்று யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள் . இது உண்மையா?

ஆடி மாதம் என்றாலே அம்பிகை மாதம் . இதை சக்தி மாதம் என்றும் சொல்லுவார்கள்.

சூரியன் கடக இராசியில் சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் இருந்து தான் தக்ஷயண புண்ணிய காலம் தொடங்குகிறது.ஆடி மாதம் மழை பிறக்கும் மாதமாக இருப்பதால் தன இந்த ஆடி மாத பிறப்பை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறோம்.

ஸ்ரீ கருடாழ்வார் அவதரித்தது ,ஸ்ரீஆண்டாள் அவதரித்தது , ஸ்ரீஹயக்கீரிவர் அவதரித்தது, .அம்பிகைக்கு சங்கர நாராயணராக சிவபெருமான்  காட்சி அளித்தது ,கஜேந்திர மோட்சம் நடந்தது ,  இப்படி பல தெய்வ நிகழ்வுகள் எல்லாம் இந்தப் புண்ணிய ஆடி மாதத்தில் தான் நடந்தது .

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கோபத்ம விரதம் கடைப்பிடிக்கப்படுவதும்,

ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபடுவதும் ,

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதுவும்,

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிப்பதுவும்,

ஆடி மாதம் பவுர்ணமியில்  வியாச பூஜை நடத்தவதும் ,

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபட்டு நன்மைபெறுவதுவும்,

திருநாவுக்கரசர் என்னும் அப்பரடிகளுக்கு திருவையாற்றில் சிவபெருமான் கைலாயக் காட்சி  அருளியதும்,

ஆடி மாதம் ஸ்வாதியில்  சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கைலையில் இருந்து வெள்ளானை அனுப்பி இறைவன் அழைத்துக் கொண்டதுவும்,

பெருமிழிலைக் குறும்பர் சேரமான் பெருமான் முக்தி பெற்றதுவும் ,

ஆடி மாதம் பவுர்ணமியில் பட்டினத்தார் முக்தி பெற்றதுவும்

,மூர்த்தி நாயனார்,புகழ் சோழர் நாயனார் முக்தி பெற்றதுவும்,

என்று பற்பல தெய்வீக அற்புதங்கள் நிறைந்து இருப்பதாலும் ,ஆடியே ஒரு  வழிபாட்டு  மாதம் என்றால் மிகையி.ல்லை.

மொத்தத்தில் நலம் பெறும் மாதமாகவே இந்த ஆடி மாதம் விளங்குகிறது.

ஆடி மாதமே பித்ருக்களுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதம். எனவே இந்த மாதத்தில் பலரும் குடும்பம்,உற்றார் உறவினர் சுற்றத்தார் உடன் குலதெய்வத் கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு ,நேர்த்திக் கடன் செலுத்தி,வழிபாடு இயற்றி வணங்கிவிட்டு வருவார்கள். எனவே தான் ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சிகளையும் தங்கள் குடும்பங்களில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்களைத் தனித்தனியே பிரிக்க வேண்டி இருக்குமோ என்ற காரணத்தால் தன ஆடி மாதம் திருமண வைக்க மாட்டார்கள்.

திருமணம் தான் ஆடி மாதத்தில் நடத்த மாட்டார்களே ஒழிய மற்றபடி புது வீடு குடி புகுதல் , வாடகைக்குக்

குடி போதல்,நிலம் வாங்குதல்,வீடு வாங்குதல்,சீமந்தம் வளைகாப்பு,பூப்புனித நீராட்டுநடத்துதல் , புதிய தொழில் ஆரம்பித்தல் , புது வேலையில் சேர்தல் , என அத்தனை மங்கள நிகழ்ச்சிகளையும் தாராளமாக நடத்தலாம் .

எந்த தப்பும் இல்லை.

ஆடி மாதம் குறித்த பயம் இனி வேண்டாம். ஆடி மாதத்தில் தான் ஆத்ம காரகனான சூரியன் ,மாத்ரு காரகனான சந்திரனின் கடக வீட்டில் பயணிப்பதால் , அம்மையப்பர் ஆக விளங்கும் சிவபெருமான் நம்

எல்லோருக்கும் நன்மைகளையே செய்வான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் தேவை இல்லை.

ShareTweetSendShare
Previous Post

நிலம், வீடு வாங்குவோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய, பதிவுத்துறை சேவை கட்டணங்கள்

Next Post

நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய இந்தியர்களின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள்

Related News

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

வேலூர் : விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies