திருப்புகழில் ஸ்ரீ இராமர்
Aug 24, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

திருப்புகழில் ஸ்ரீ இராமர்

ஸ்ரீ இராமரை கோசலை கொஞ்சி அழைக்கும் அழகோ அழகு !

Web Desk by Web Desk
Jul 14, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞான பூமியான பாரதத்தில் இராமாயணமும் மகாபாரதமும் இரண்டு முக்கியமான இதிகாச நூல்களாகும்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு செய்திகள் மட்டும் இல்லாமல் யாரையும் நல்ல கதிக்குக் கொண்டுச் சேர்க்கும் அதி அற்புதமான நூல்களாகும் .

இராம என்றால் ஒளி , அயனம் என்றால் வழி. அதாவது  இராமாயணம் என்றால் ஒளிமயமான வழி என்று பொருள். சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய மூல இராமாயணம்  ஏழு காண்டங்களில் 24000 சுலோகங்களில் அமைந்திருக்கிறது .

இதனையே தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் 11000 பாடல்களில் பெரும்காப்பியமாக செய்து இருக்கிறார். இவை தவிர மொத்தம் 120 வகையான இராமாயண நூல்கள் பல்வேறு சிறந்த புலவர்கள் மற்றும் ரிஷிகளால் எழுதப்பட்டுள்ளன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த இராமாயணத்திலும் யாரும் இராமரின் குழந்தைப் பருவத்தைப் பாடியதாக இல்லை. வால்மீகி இராமாயணத்தில் கூட பால காண்டத்திலேயே விசுவாமித்திரர் வருகை வந்து விடுகிறது. கம்பராமாயணத்திலும் கம்பர் குழந்தை இராமரைப் பற்றி இந்தச் செய்தியும் சொல்லவில்லை.

அப்படியானால் குழந்தை இராமரைப் பற்றி யாருமே படவில்லையா ?

இராமாயணத்தில் தான் இல்லையே ஒழிய திருப்புகழில் அருணகிரிநாதர் குழந்தை இராமரைக் கோசலை கொஞ்சுவதாக பாடி இருக்கிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதா ? இதோ அந்தத்  திருப்புகழையே பார்த்து விடுவோம்.

எந்தை வருக ரகுநா யகவருக

மைந்த வருக மகனே யினிவருக

என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை

யுண்க வருக மலர்சூ டிடவருக

என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்

சிந்தை மகிழு மருகா

இப்படி “தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் தான்  கோசலை வாயிலாக குழந்தை இராமரை ஒரு பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வருகை பருவத்தில்  வரும் பாடல் போல் அருணகிரி நாதர் பாடியிருக்கிறார் .

பாடலுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம் .

எந்தை வருக ரகுநாயக  வருக … என் அப்பனே வா,ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே இனி வருக … குழந்தாய் வா, மகனே இதோ வா,

என்கண் வருக எனது  ஆருயிர் வருக … என் கண்ணே வா, என்ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக  அரசே வருக  … அழகிய ராமனே வா, இங்கேவா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூடிட  வருக … பால் குடிக்க வா, பூ முடிக்க வா,

என்று பரிவினொடு கோசலை  புகல … என்றெல்லாம் அன்போடு

கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா … வந்த மாயன் திருமால் மனம்மகிழும் மருமகனே,

இதில் பாருங்கள் கோசலை பத்து முறை ஸ்ரீ இராமரை வருக வருக என்று அழைத்திருப்பாள் .

என்ன காரணம் தெரியுமா?

ஸ்ரீ மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்ற கணக்கில் தான் .

இந்த ஒரு திருப்புகழைப்  பரிவோடு பாடினாலே அந்த திருச்செந்தூர் முருகன் மட்டுமில்லை, ஸ்ரீஇராமரும் நமக்கு எல்லா வளங்களையும் வாரி வாரி வழங்குவார் .

ShareTweetSendShare
Previous Post

நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய இந்தியர்களின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள்

Next Post

அனைத்து ரயில் நிலையங்களிலும் UTS செயலி சேவை

Related News

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies