திருப்புகழில் ஸ்ரீ இராமர்
Sep 14, 2025, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

திருப்புகழில் ஸ்ரீ இராமர்

ஸ்ரீ இராமரை கோசலை கொஞ்சி அழைக்கும் அழகோ அழகு !

Web Desk by Web Desk
Jul 14, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞான பூமியான பாரதத்தில் இராமாயணமும் மகாபாரதமும் இரண்டு முக்கியமான இதிகாச நூல்களாகும்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு செய்திகள் மட்டும் இல்லாமல் யாரையும் நல்ல கதிக்குக் கொண்டுச் சேர்க்கும் அதி அற்புதமான நூல்களாகும் .

இராம என்றால் ஒளி , அயனம் என்றால் வழி. அதாவது  இராமாயணம் என்றால் ஒளிமயமான வழி என்று பொருள். சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய மூல இராமாயணம்  ஏழு காண்டங்களில் 24000 சுலோகங்களில் அமைந்திருக்கிறது .

இதனையே தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் 11000 பாடல்களில் பெரும்காப்பியமாக செய்து இருக்கிறார். இவை தவிர மொத்தம் 120 வகையான இராமாயண நூல்கள் பல்வேறு சிறந்த புலவர்கள் மற்றும் ரிஷிகளால் எழுதப்பட்டுள்ளன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த இராமாயணத்திலும் யாரும் இராமரின் குழந்தைப் பருவத்தைப் பாடியதாக இல்லை. வால்மீகி இராமாயணத்தில் கூட பால காண்டத்திலேயே விசுவாமித்திரர் வருகை வந்து விடுகிறது. கம்பராமாயணத்திலும் கம்பர் குழந்தை இராமரைப் பற்றி இந்தச் செய்தியும் சொல்லவில்லை.

அப்படியானால் குழந்தை இராமரைப் பற்றி யாருமே படவில்லையா ?

இராமாயணத்தில் தான் இல்லையே ஒழிய திருப்புகழில் அருணகிரிநாதர் குழந்தை இராமரைக் கோசலை கொஞ்சுவதாக பாடி இருக்கிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதா ? இதோ அந்தத்  திருப்புகழையே பார்த்து விடுவோம்.

எந்தை வருக ரகுநா யகவருக

மைந்த வருக மகனே யினிவருக

என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை

யுண்க வருக மலர்சூ டிடவருக

என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்

சிந்தை மகிழு மருகா

இப்படி “தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் தான்  கோசலை வாயிலாக குழந்தை இராமரை ஒரு பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வருகை பருவத்தில்  வரும் பாடல் போல் அருணகிரி நாதர் பாடியிருக்கிறார் .

பாடலுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம் .

எந்தை வருக ரகுநாயக  வருக … என் அப்பனே வா,ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே இனி வருக … குழந்தாய் வா, மகனே இதோ வா,

என்கண் வருக எனது  ஆருயிர் வருக … என் கண்ணே வா, என்ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக  அரசே வருக  … அழகிய ராமனே வா, இங்கேவா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூடிட  வருக … பால் குடிக்க வா, பூ முடிக்க வா,

என்று பரிவினொடு கோசலை  புகல … என்றெல்லாம் அன்போடு

கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா … வந்த மாயன் திருமால் மனம்மகிழும் மருமகனே,

இதில் பாருங்கள் கோசலை பத்து முறை ஸ்ரீ இராமரை வருக வருக என்று அழைத்திருப்பாள் .

என்ன காரணம் தெரியுமா?

ஸ்ரீ மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்ற கணக்கில் தான் .

இந்த ஒரு திருப்புகழைப்  பரிவோடு பாடினாலே அந்த திருச்செந்தூர் முருகன் மட்டுமில்லை, ஸ்ரீஇராமரும் நமக்கு எல்லா வளங்களையும் வாரி வாரி வழங்குவார் .

ShareTweetSendShare
Previous Post

நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய இந்தியர்களின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள்

Next Post

அனைத்து ரயில் நிலையங்களிலும் UTS செயலி சேவை

Related News

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies