இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழர் வீரமுத்துவேல்.
Oct 6, 2025, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தமிழர் வீரமுத்துவேல்.

சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் யார்

Web Desk by Web Desk
Jul 14, 2023, 08:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

நிகழ்வை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சரித்திரத்தில் முத்திரை பதிக்கும் இந்தச் சாதனையில், தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவும் பங்களித்துப் பெருமை சேர்த்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு.  இவரின்  மகன் தான் வீரமுத்துவேல். 42 வயதான இவர் தான் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனர்.

தற்போது பெங்களூருவில் வசிக்கும் இவரின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர். தாய் இரமணிகுடும்பத் தலைவி. தாயும் தந்தையும் விழுப்புரத்தில் தான் வசீது வருகின்றனர்.

விழுப்புரம் இரயில்வே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த வீரமுத்துவேல் ,அடுத்து  விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயதிலேயே காரணத்தால் பள்ளி படிப்பு முடித்துபின் தொழிற்கல்வி படித்தார்., அதன் பின் தாம்பரத்தில் தனியார் கல்லூரியிலும், சென்னை ஐஐடியிலும் தொழிற்கல்வி, பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என படித்து முன்னேறினார் வீரமுத்துவேல்.

 

சென்னை ஐஐடியின் ஏரோ-ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவருக்கு, 1989-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. டிப்ளமோ படிப்பிலிருந்து கற்றதால் நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் இயல்பு, வீரமுத்துவேலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது.

2016-ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வீரமுத்துவேல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை, பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது அந்தத் தொழில்நுட்பம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது. ஏனெனில், நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.  வீரமுத்துவேலின் இந்த சோதனை முயற்சிதான் அவரை சந்திரயான்-3 திட்ட இயக்குநராகவும் மாற்றியது.

இஸ்ரோவில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் பணியாற்றிய வீரமுத்துவேல், 2019-ஆம் வருடம் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு கீழே 29 துணை இயக்குநர்களும், அவர்களுக்குக் கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியதுதான் சந்திரயான்-3 திட்டம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான ஆய்வுகள், பரிசோதனைகளுக்குப் பிறகு சந்திரயான்3  விண்கலம் முழு வடிவத்தை அடைந்துள்ளது.

மெய்நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் – வன்பொருள் குறித்தான அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடுகொண்ட வீரமுத்துவேல், கடந்த இரண்டு ஆண்டு காலத்தை ஆய்வகத்திலேயே செலவிட்டுள்ளார். ஏற்கெனவே சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்திலும் இந்தியாவின் நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் வீரமுத்துவேல் என்ற தமிழர்

Tags: tamilnadu
ShareTweetSendShare
Previous Post

சந்திராயன்-3 பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

BE, BTech என்ன வித்தியாசம்?

Related News

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Load More

அண்மைச் செய்திகள்

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies