இந்தியாவின் யு.பி.ஐ சேவையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி - பிரதமர் நரேந்திர மோடி
Nov 18, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் யு.பி.ஐ சேவையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி – பிரதமர் நரேந்திர மோடி

நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல் சேவைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 21, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி விமானநிலையத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் அவரை வரவேற்றார். பின்னர், இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவை  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  நேற்று சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே இன்று சந்தித்தார். மேலும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியா உடனான, மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தப்  பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைக்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்தியாவின் யு.பி.ஐ பண பரித்தனையை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளிடம் பேசிய ரணில் விக்ரம சிங்கே,
இலங்கையில் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில் இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி இருந்தது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தியாவுடன் தொழில், வர்த்தகம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன என்று கூறிய அவர்
இந்தியாவின் வளர்ச்சி, அயல் நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளுக்குச் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் அதானியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கொழும்பில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்துவது, 500 மெகாவாட் காற்றாலைத் திட்டம், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார்.

Tags: srilankapm mofi
ShareTweetSendShare
Previous Post

வேலைவாய்ப்பு திருவிழா மூலம்  அரசு துறைகளில்  70,000 க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை  நாளை பிரதமர் மோடி வழங்குகிறார்

Next Post

இந்தியா இலங்கை உறவுப் பாலம்- தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies