இந்தியாவின் யு.பி.ஐ சேவையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி - பிரதமர் நரேந்திர மோடி
Jun 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் யு.பி.ஐ சேவையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி – பிரதமர் நரேந்திர மோடி

நாகப்பட்டினம் - இலங்கை இடையே கப்பல் சேவைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Murugesan M by Murugesan M
Jul 21, 2023, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி விமானநிலையத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் அவரை வரவேற்றார். பின்னர், இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவை  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  நேற்று சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே இன்று சந்தித்தார். மேலும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியா உடனான, மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தப்  பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைக்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன . இந்தியாவின் யு.பி.ஐ பண பரித்தனையை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளிடம் பேசிய ரணில் விக்ரம சிங்கே,
இலங்கையில் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில் இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி இருந்தது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தியாவுடன் தொழில், வர்த்தகம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன என்று கூறிய அவர்
இந்தியாவின் வளர்ச்சி, அயல் நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளுக்குச் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் அதானியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கொழும்பில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்துவது, 500 மெகாவாட் காற்றாலைத் திட்டம், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார்.

Tags: srilankapm mofi
ShareTweetSendShare
Previous Post

வேலைவாய்ப்பு திருவிழா மூலம்  அரசு துறைகளில்  70,000 க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை  நாளை பிரதமர் மோடி வழங்குகிறார்

Next Post

இந்தியா இலங்கை உறவுப் பாலம்- தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies