தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை
Jul 27, 2025, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 29, 2023, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் ” பாதயாத்திரையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
பாத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களை பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாற்றினார். பிரதமர் மோடியின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர சகோதரிகளுடன் அரசு சார்ந்த அவர்களுக்கான தேவைகள் குறித்தும் உரையாடினார்.

பாதயாத்திரை தொடங்கிய பின் முதல் முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

2001லிருந்து 2013 வரைக்கும் 85 தமிழக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வந்த பிறகு ஒரு தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவில்லை. மேலும் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்றைய நிலையில் மீனவர்களின் உயிரும் உடைமைகளும் பத்திரமாக உள்ளது. தமிழக மீனவர்களின் உயிரையும் உடைமைகளையும்  பாதுகாப்பது எங்கள் கடமை. இதற்காக பாஜக தொடர்ந்து முயற்சி எடுக்கும். அதில் வெற்றி பெற தொடர்ந்து செயல்படுவோம். இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளைப்   பத்திரமாக மீட்டுக் கொடுக்க உரிய நடவடிக்கைகள்  எடுத்து வருகிறோம்.

தமிழக மீனவர்களுக்கு நான் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன், பிரதமர் மோடி உங்களுடன் இருக்கிறார், அதற்காகத்தான் மீன் வளத்திற்காக  ஒரு துறை, ஒரு அமைச்சர்.

திமுக தேர்தல் அறிக்கையில், இரண்டு லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதாக சொன்னார்கள், ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை,. மீனவர்களுக்கு இலவச டீசல் வழங்குவதாக சொன்னார்கள், அதையும் நிறைவேற்றவில்லை.  மீன்பிடி தடைக் காலத்தில் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத்  தெரிவித்தார்கள், அதையும்  தரவில்லை.    ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்களுக்கான ஒருங்கிணைப்புக்  கூடங்கள் தொடங்கி தந்திருக்கிறார்.  கடல்பாசிகள்  ஆராய்ச்சி நிலையம் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் உருவாக்கித் தந்திருக்கிறார்.  ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால்  தமிழக மீனவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம். கச்சத்தீவை திரும்ப பெற்றாக வேண்டும், அதற்காக பாஜக முயற்சி எடுக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி

Next Post

அப்துல் கலாமின் கனவை பிரதமர் நரேந்திரா மோடி நிறைவேற்றுகிறார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies