இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகம் வருகை
May 19, 2025, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகம் வருகை

ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க முதுமலைக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி வருகை

Web Desk by Web Desk
Aug 1, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வருகையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க முதுமலைக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரவிருப்பதால் பாதுகாப்பு காரணமாக இன்றுமுதல் வரும் ஐந்தாம் தேதி வரை முதுமலை யானைகள் முகாமில்  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை  என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி ஆகிய இரு  யானைக் குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.   இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து குட்டி யானைகளுடன் நடித்த பொம்மன், பெள்ளி சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகை புரிந்து 2 பேரையும் பாராட்டினார். தொடர்ந்து நாடு முழுவதும் பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களைத்  தெரிவித்தனர். கடந்த 18-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பொம்மன், பெள்ளி இருவரும்  பாராட்டுகளைப்  பெற்றனர்.

இதனிடையே ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வரவிருக்கிறார் . அன்றைய தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பகல் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு 3.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து வளர்ப்பு யானைகளைப்  பார்வையிட்ட பின்னர் மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு குடியரசு தலைவர் செல்கிறார். குடியரசு தலைவர் வருகையையொட்டி முன்னேற்பாட்டுப்  பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி முதுமலை யானைகள் முகாமில் பாதுகாப்பு காரணமாக,  இன்று முதல் வரும் ஐந்தாம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை- மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

கோவில் உண்டியல் கையாள விதிகள் பின்பற்றப்படுகிறதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies