கோவில் உண்டியல் கையாள விதிகள் பின்பற்றப்படுகிறதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Jul 21, 2026, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் உண்டியல் கையாள விதிகள் பின்பற்றப்படுகிறதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில் உண்டியல்களைக்  கையாளுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தெரிவிக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் 99.7 சதவீத கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை எனவும், அரசு அதிகாரிகளைத்  தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களை நீக்க உத்தர்விட வேண்டும் என திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்ககராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான மூன்று வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதேபோல, அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் உண்டியல்களை கையாள தக்கார்களுக்கு தடை விதிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இரு சாவிகளையும் கோவில் தக்கார்கள் வைத்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்து சமயஅறநிலையத் துறை  சட்டத்தில், கோவில் உண்டியலின் இரு சாவிகளில் ஒன்று அறங்காவலர் குழு வசமும், மற்றொன்று செயல் அலுவலர் வசமும் இருக்க வேண்டும். அறங்காவலர்கள் இல்லாத போது தக்காரும், சம்பந்தப்பட்ட அதிகாரியும் உண்டியலை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகம் வருகை

Next Post

ராஜஸ்தானில் 336 அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Related News

ஜந்தர் மந்தரின் CJP கூடாரங்கள் அகற்றம்ல; காவல்துறை நடவடிக்கை

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies