வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, பட்டியல் எழுத்தரை அமைச்சர் வெங்கட ரமணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு பட்டியல் எழுத்தராக பணிபுரியும் வேல்முருகன், நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் லஞ்சம் பெறுவதாக விவசாயி ஒருவர் புகாரளித்தார். இதையடுத்து, பட்டியல் எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கட ரமணன் உத்தரவிட்டார்.
இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதுவரை நெல் கொள்முதலை தற்காலிக நிறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
















