நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென திமுக வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக்கால கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்தும் என கூறினார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க திமுக வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்.
















