கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மசூதி மற்றும் தேவாலயங்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பதில்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தபோதே பழனி கோயில் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது திமுக நிர்வாகி சாட்சி கையெழுத்து போட்டுள்ளதால் பழனி கோயில் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கோயில்களுக்கு தனி வாரியத்தை உருவாக்கிவிட்டு, அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் கோயில் தங்கத்தை உருக்கி ஊழல் செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும காடேஸ்வரா வலியுறுத்தினார்-
















