முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!
Oct 4, 2025, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

Web Desk by Web Desk
Aug 11, 2023, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தில் மீதான விவாதம் ஆகஸ்ட்  8, 9-ம் தேதிகளில் நடந்தது. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்து பேசினர். அப்போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இடையூறை ஏற்படுத்தினார்.

நேற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதற்திற்கு பதிலளித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போதும், பிரதமரைப் பேசவிடாமல் இடை இடையே இடையூறை ஏற்படுத்தினார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இதையடுத்து, அவரை அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பேசும் போது, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அடிக்கடி இடையூறு செய்தார். பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை. இவ்வாறு இடையூறு செய்வது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. மேலும், தேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறினார். ஆகவே, அவரது தவறான நடத்தையின் காரணமாக, இந்த விஷயத்தை மேலதிக விசாரணைக்காக அவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும், குழு தனது அறிக்கையைச்  சமர்ப்பிக்கும் வரை ஆதிர் இரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆகவே, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Adhir Ranjan ChowdhuryAdhir RanjanIndian National CongressINC Adhir Ranjan
ShareTweetSendShare
Previous Post

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

Next Post

11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies