முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!
Apr 22, 2026, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தில் மீதான விவாதம் ஆகஸ்ட்  8, 9-ம் தேதிகளில் நடந்தது. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்து பேசினர். அப்போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இடையூறை ஏற்படுத்தினார்.

நேற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதற்திற்கு பதிலளித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போதும், பிரதமரைப் பேசவிடாமல் இடை இடையே இடையூறை ஏற்படுத்தினார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இதையடுத்து, அவரை அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பேசும் போது, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அடிக்கடி இடையூறு செய்தார். பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை. இவ்வாறு இடையூறு செய்வது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. மேலும், தேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறினார். ஆகவே, அவரது தவறான நடத்தையின் காரணமாக, இந்த விஷயத்தை மேலதிக விசாரணைக்காக அவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும், குழு தனது அறிக்கையைச்  சமர்ப்பிக்கும் வரை ஆதிர் இரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆகவே, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Adhir Ranjan ChowdhuryAdhir RanjanIndian National CongressINC Adhir Ranjan
ShareTweetSendShare
Previous Post

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

Next Post

11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Related News

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies