முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!
Jul 29, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தில் மீதான விவாதம் ஆகஸ்ட்  8, 9-ம் தேதிகளில் நடந்தது. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்து பேசினர். அப்போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இடையூறை ஏற்படுத்தினார்.

நேற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதற்திற்கு பதிலளித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போதும், பிரதமரைப் பேசவிடாமல் இடை இடையே இடையூறை ஏற்படுத்தினார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இதையடுத்து, அவரை அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பேசும் போது, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அடிக்கடி இடையூறு செய்தார். பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை. இவ்வாறு இடையூறு செய்வது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. மேலும், தேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறினார். ஆகவே, அவரது தவறான நடத்தையின் காரணமாக, இந்த விஷயத்தை மேலதிக விசாரணைக்காக அவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும், குழு தனது அறிக்கையைச்  சமர்ப்பிக்கும் வரை ஆதிர் இரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆகவே, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Adhir Ranjan ChowdhuryAdhir RanjanIndian National CongressINC Adhir Ranjan
ShareTweetSendShare
Previous Post

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

Next Post

11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies