நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
Aug 15, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Web Desk by Web Desk
Aug 12, 2023, 08:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் தற்போது நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறி, மறுப்புத் தெரிவித்து விட்டது. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் “எண்ணித் துணிக” என்கிற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை எழுந்து, “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுகின்றனர். அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள். எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி, “நீட் தேர்வுக்குத் தடை கோருவதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்.

மேலும், இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் வெற்றிபெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே ஆழமாகக் கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றிபெறலாம். அதோடு, ஒவ்வொரு முறையும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வுக் குழு அறிக்கையின்படி பார்த்தால், நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.

Tags: RN Ravigovernor ravi
ShareTweetSendShare
Previous Post

இன்று உலக யானைகள் தினம் 2023

Next Post

2047-க்கு முன் இந்தியா வளர்ச்சி அடையும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திட்டவட்டம்

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies