நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 08:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் தற்போது நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறி, மறுப்புத் தெரிவித்து விட்டது. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் “எண்ணித் துணிக” என்கிற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை எழுந்து, “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுகின்றனர். அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள். எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி, “நீட் தேர்வுக்குத் தடை கோருவதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்.

மேலும், இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் வெற்றிபெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே ஆழமாகக் கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றிபெறலாம். அதோடு, ஒவ்வொரு முறையும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வுக் குழு அறிக்கையின்படி பார்த்தால், நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

இன்று உலக யானைகள் தினம் 2023

Next Post

2047-க்கு முன் இந்தியா வளர்ச்சி அடையும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திட்டவட்டம்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies