பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!
Sep 2, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி கைது செய்யப்பட்டிருப்பதால் இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர், பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாகக் கிடைத்த விலை உயர்ந்த பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் விற்றுப் பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தற்போது சிறையில் இருந்து வருகிறார். எனினும், தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை எதிர்த்து இம்ரான் கான் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், தனது ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச சதி இருப்பதாகக் கூறி, ஒரு கடிதத்தைத் காட்டினார். இதையடுத்து, அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறையில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்திய எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், இம்ரான் கானுக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இம்ரான் கான் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஷா மக்மூத் குரேஷியை காவல்துறையினர் திடீரென நேற்று கைது செய்திருப்பது சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் ஷா மகமூத் குரேஷி. அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவராகவும், அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இம்ரான் கானின் அனைத்து நடவடிக்கைகளையும் நன்கு அறிந்தவர். அதேபோல, இம்ரானின் அனைத்து இரகசியங்களையும் நன்கு அறிந்தவர். இவர் கைது செய்யப்பட்டிருப்பதுதான் இம்ரானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistan
Share
Tweet
SendShare
Previous Post

கருப்பு பணத்தைப் புழக்கத்தில் விட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies