பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!
Feb 7, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி கைது செய்யப்பட்டிருப்பதால் இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர், பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாகக் கிடைத்த விலை உயர்ந்த பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் விற்றுப் பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தற்போது சிறையில் இருந்து வருகிறார். எனினும், தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை எதிர்த்து இம்ரான் கான் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், தனது ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச சதி இருப்பதாகக் கூறி, ஒரு கடிதத்தைத் காட்டினார். இதையடுத்து, அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறையில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்திய எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், இம்ரான் கானுக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இம்ரான் கான் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஷா மக்மூத் குரேஷியை காவல்துறையினர் திடீரென நேற்று கைது செய்திருப்பது சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் ஷா மகமூத் குரேஷி. அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவராகவும், அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இம்ரான் கானின் அனைத்து நடவடிக்கைகளையும் நன்கு அறிந்தவர். அதேபோல, இம்ரானின் அனைத்து இரகசியங்களையும் நன்கு அறிந்தவர். இவர் கைது செய்யப்பட்டிருப்பதுதான் இம்ரானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

கருப்பு பணத்தைப் புழக்கத்தில் விட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies