ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!
Sep 13, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? எனக் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1962 போருக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? என்று ராகுல் காந்திக்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 18-ம் தேதி வருகை தந்தார்.

பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “சீன துருப்புகள் காஷ்மீர் மாநில மக்களின் மேய்ச்சல் நிலத்தை கைப்பற்றுவதாக மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு அங்குல நிலத்தைக்கூட எடுக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இது உண்மை இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். “பாலகோட் மற்றும் உரி தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ராகுல் காந்தியின் பேச்சு இந்திய பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இராணுத்தினரின் மன உறுதியை குலைக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அதேசமயம், 1962 போருக்கு முன்பும் பின்பும், இந்தியாவின் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசும்போது, எல்லை பகுதியில் உட்கட்டமைப்பை ஏற்படுத்தி சீனாவை எரிச்சலடைய வைக்க விரும்பவில்லை என்று கூறினார். இதுதான் உங்களது கடந்த கால வரலாறு.

ஆனால், தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் எல்லைப் பகுதிகளான லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பைப் பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் இராணுவ வாகனங்கள் துரிதமாக செயல்பட உதவும் வகையில் இருக்கின்றன” என்று ராகுல் காந்திக்கு ரவிசங்கர்  பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags: Ravi Shankar Prasad MP
ShareTweetSendShare
Previous Post

மதரஸாக்கள் மெகா ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!

Next Post

ஜெ.பி.நட்டா மீது வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!

Related News

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

தீபாவளி பண்டிகை – 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முதல்வர் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் எந்த பயனும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies