ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!
Sep 9, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? எனக் கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1962 போருக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? என்று ராகுல் காந்திக்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 18-ம் தேதி வருகை தந்தார்.

பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “சீன துருப்புகள் காஷ்மீர் மாநில மக்களின் மேய்ச்சல் நிலத்தை கைப்பற்றுவதாக மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு அங்குல நிலத்தைக்கூட எடுக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இது உண்மை இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். “பாலகோட் மற்றும் உரி தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ராகுல் காந்தியின் பேச்சு இந்திய பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இராணுத்தினரின் மன உறுதியை குலைக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அதேசமயம், 1962 போருக்கு முன்பும் பின்பும், இந்தியாவின் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசும்போது, எல்லை பகுதியில் உட்கட்டமைப்பை ஏற்படுத்தி சீனாவை எரிச்சலடைய வைக்க விரும்பவில்லை என்று கூறினார். இதுதான் உங்களது கடந்த கால வரலாறு.

ஆனால், தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் எல்லைப் பகுதிகளான லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பைப் பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் இராணுவ வாகனங்கள் துரிதமாக செயல்பட உதவும் வகையில் இருக்கின்றன” என்று ராகுல் காந்திக்கு ரவிசங்கர்  பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags: Ravi Shankar Prasad MP
Share
Tweet
SendShare
Previous Post

மதரஸாக்கள் மெகா ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!

Next Post

ஜெ.பி.நட்டா மீது வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies