ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!
Jun 9, 2026, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலுக்கு பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பதிலடி!

காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? எனக் கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1962 போருக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? என்று ராகுல் காந்திக்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 18-ம் தேதி வருகை தந்தார்.

பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “சீன துருப்புகள் காஷ்மீர் மாநில மக்களின் மேய்ச்சல் நிலத்தை கைப்பற்றுவதாக மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு அங்குல நிலத்தைக்கூட எடுக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இது உண்மை இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். “பாலகோட் மற்றும் உரி தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ராகுல் காந்தியின் பேச்சு இந்திய பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இராணுத்தினரின் மன உறுதியை குலைக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அதேசமயம், 1962 போருக்கு முன்பும் பின்பும், இந்தியாவின் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசும்போது, எல்லை பகுதியில் உட்கட்டமைப்பை ஏற்படுத்தி சீனாவை எரிச்சலடைய வைக்க விரும்பவில்லை என்று கூறினார். இதுதான் உங்களது கடந்த கால வரலாறு.

ஆனால், தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் எல்லைப் பகுதிகளான லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பைப் பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் இராணுவ வாகனங்கள் துரிதமாக செயல்பட உதவும் வகையில் இருக்கின்றன” என்று ராகுல் காந்திக்கு ரவிசங்கர்  பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags: Ravi Shankar Prasad MP
ShareTweetSendShare
Previous Post

மதரஸாக்கள் மெகா ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!

Next Post

ஜெ.பி.நட்டா மீது வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து!

Related News

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி

பழனி முருகன் கோவில் நிர்வாகம்; அமைச்சர் சாடல்

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் பழனி ரயில் நிலையம் : வீடியோ வெளியிட்டது தெற்கு ரயில்வே!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies