இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7:30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
அயர்லாந்துக்கு எதிராக இதுவரை இந்திய அணி தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துக் கொள்ள இந்திய வீரர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி நடைபெறயிருக்கிறது.
இந்த தொடரில் வாய்ப்பே கிடைக்காத வீரர்களுக்கு இம்முறை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கலாம் என பும்ரா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி சஞ்சு சம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் கலக்கிய ஜித்தேஸ் ஷர்மா சேர்க்கப்படுவார் என தெரிகிறது. ஜித்தேசஷ் தற்போது சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதனால் ஆசிய கோப்பை விளையாடுவதற்கு ஏதுவாக ஜித்தேஷ் சர்மாவுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஆவேஷ் கான் கடந்த ஏழு டி20 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். இதனால் அவருக்கு இன்றைய ஆட்டத்தில் பும்ரா வாய்ப்பு கொடுப்பார் என நம்பப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றம் நடக்கும் என தெரிகிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என தெரிகிறது. வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறமையை பரிசோதிக்க இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் ஆட்டமே பாதிக்கப்படும் அளவுக்கு மழை இருக்காது என்றும் நம்பப்படுகிறது