"ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .
Aug 19, 2025, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

அவதூறு பரப்புவோர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தன் மீது யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு  தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆருத்ரா வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முகம் தெரியாத நபருக்காகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வம் காட்டுவது ஏன்? எனத் தெரியவில்லை.

பா.ஜ.கவில் பல கோடி உண்மையான தொண்டர்கள் உள்ள நிலையில், அதில், ஒரு சாதாரணத் தொண்டர்களுள் ஒருவனான நான் உள்ளேன். நான், தமிழகத்தில் ஆளும் தி.மு.கவுக்கு எதிராகப் போராடி வருகின்றேன். பொய் புகாரின் பேரில். என்னை அரசியலில் முடக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவே தெரிகிறது.

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தினமும் பல நூறு மனுக்கள் வரும், அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை. அப்படி இருக்கும்போது, இதை மட்டும் குறிப்பிட்டு சொல்வதின் நோக்கம் என்ன?

நந்தகுமார் என்பவர் உண்மையிலேயே சமூக ஆர்வலரா? என்பது யாருக்கும் தெரியாது. என் மீதான திட்டமிட்ட பொய் புகாரின் பேரில் உத்தரவிடப்பட்ட விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இது தொடர்பாக பல முறை தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன். தொடர்ந்து யாராவது அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: amarprasad redy bjp
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies