சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி, சாகுல் ஹமீது ஆகிய 2 பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்தும் வினமாங்கள் வருகிறது. இதில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர்.
இதனால் கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளைத் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவர்கள் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரிடம் இருந்து மொத்தம் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ தங்கம் பிடிப்பட்டது.
இதனையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தைக் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி, சாகுல் ஹமீது ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.