குற்றாலத்தில் திடீர் தீ விபத்து - 20 கடைகள் நாசம்!
Jan 14, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து – 20 கடைகள் நாசம்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி பகுதி அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 தற்காலிக கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

குற்றாலத்தில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, விளையாட்டுப் பொருட்கள், ரெடிமேட் துணிக்கடை, பழக்கடை, மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பொருட்களைச் சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்திலும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டியது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகச் சொற்ப அளவிலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து தீடீர் தீ விபத்து நிகழ்ந்தது.  தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாது. மேலும், திரும்பிய திசை எங்கும் கரும்புகை காணப்பட்டது. விண்ணை முட்டும் அளவு அந்தப் பகுதியே புகை மண்டலமானது  இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது எனக் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில், அக்கம் பக்கத்து பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக கடையில் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதாக முதல்கட்ட தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!

Next Post

கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் கப்பல்கள்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies