குற்றாலத்தில் திடீர் தீ விபத்து - 20 கடைகள் நாசம்!
Nov 9, 2025, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து – 20 கடைகள் நாசம்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி பகுதி அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 தற்காலிக கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

குற்றாலத்தில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, விளையாட்டுப் பொருட்கள், ரெடிமேட் துணிக்கடை, பழக்கடை, மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பொருட்களைச் சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்திலும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டியது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகச் சொற்ப அளவிலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து தீடீர் தீ விபத்து நிகழ்ந்தது.  தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாது. மேலும், திரும்பிய திசை எங்கும் கரும்புகை காணப்பட்டது. விண்ணை முட்டும் அளவு அந்தப் பகுதியே புகை மண்டலமானது  இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது எனக் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில், அக்கம் பக்கத்து பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக கடையில் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதாக முதல்கட்ட தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!

Next Post

கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் கப்பல்கள்!

Related News

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Load More

அண்மைச் செய்திகள்

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies