குற்றாலத்தில் திடீர் தீ விபத்து - 20 கடைகள் நாசம்!
Jul 26, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குற்றாலத்தில் திடீர் தீ விபத்து – 20 கடைகள் நாசம்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி பகுதி அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 தற்காலிக கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

குற்றாலத்தில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, விளையாட்டுப் பொருட்கள், ரெடிமேட் துணிக்கடை, பழக்கடை, மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பொருட்களைச் சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்திலும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டியது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகச் சொற்ப அளவிலேயே இருந்தது.

இந்த நிலையில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து தீடீர் தீ விபத்து நிகழ்ந்தது.  தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாது. மேலும், திரும்பிய திசை எங்கும் கரும்புகை காணப்பட்டது. விண்ணை முட்டும் அளவு அந்தப் பகுதியே புகை மண்டலமானது  இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது எனக் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில், அக்கம் பக்கத்து பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக கடையில் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதாக முதல்கட்ட தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர்!

Next Post

கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் கப்பல்கள்!

Related News

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies