ஆசியக் கோப்பைக்கு முன்னதாக விராட் கோலி புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். மாறிய ஹேர் ஸ்டைலுடன் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசியக் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, யோ யோ டெஸ்ட் பரிசோதனையும் செய்து கொண்டனர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரரான கோலி, ஆசிய கோப்பைக்காக புதிய ஹேர்ஸ்டைலை வைத்துள்ளார். புதிய தோற்றம் மற்றும் அதன் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஃபேஷன் உலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் விராட் கோலி. தனித்துவமான ஃபேஷன் தன்மை மற்றும் பிரத்யேக நாகரீக உடைகளுக்குப் பெயர் பெற்ற இவர், முன்னணி நிறுவனங்களுக்குத் தூதராக இருக்கிறார். வித்தியாசமான ஹேர்ஸ்டைலையும் மற்றும் வித்தியாசமான தோற்றத்தையும் முயற்சி செய்து வருகிறார்.
இவரது புதிய ஹேர் ஸ்டைலுக்குப் பின்னால் உள்ள முடியலங்கார வல்லுனர் அல்ஃபஹத் அகமது.
2023 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி, இலங்கை புறப்படுவதற்கு முன்பு பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
தேசியக் கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற பயிற்சியின் முதல் நாளில் வீரர்களுக்கான உடற்தகுதி மற்றும் மருத்துவ மதிப்பீடுகள் இடம்பெற்றன. யோ-யோ டெஸ்டில், விராட் கோலி 17.2 ஸ்கோரும் எடுத்தனர்.