பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!

2024 மக்களவைத் தேர்தலில் கட்சி அதிகபட்ச வாக்குகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பா.ஜ.க. நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக  பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே, மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்காக  பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.

இதற்காக, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. முதலில் மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தலில் இதே யுத்தியை பா.ஜ.க. கையில் எடுத்தது. இது நல்ல பலனைக் கொடுக்கவே, தற்போது தேசிய அளவிலான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறது.

இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தின்போது, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இடம் பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறிந்து சேர்ப்பது, உயிரிழந்த, சந்தேகத்திற்குரிய மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவகாரங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளைப் பா.ஜ.க.வினர் மேற்கொள்வார்கள்.

இதற்காக பூத் கமிட்டி வரை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரசாரத்தின்போது பா.ஜ.க.வினர் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்வார்கள்.

மேலும், இப்பிரசாரத்தின்போது மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 20,000 வாக்காளர்களையும், நகராட்சி பகுதிகளில் 10,000 வாக்காளர்களையும், ஒன்றியப் பகுதிகளில் 5,000 வாக்காளர்களையும் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்த பிரசாரப் பொறுப்பு, பா.ஜ.க. இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்பணியை கவனிப்பதற்காக பா.ஜ.க. இணைப் பொதுச்செயலாளர் (அமைப்பு) சிவபிரகாஷ் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில் பா.ஜ.க. தேசியப் பொதுச்செயலாளர்கள் குமால் சஞ்சய் பாண்டே, துஷ்யந்த் கவுதம், துணைத்தலைவர்கள் லஷ்மிகாந்த் வாஜ்பாய், ரேகா வர்மா, தேசியச் செயலாளர்கள் சத்யகுமார், காமகிய பிரசாத் தாசா, பாரதிய கிஷான் மோர்ச்சா தலைவர் ராஜ்குமார் சாஹா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 6 மாநிலங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது

Tags: bjpvoters awareness
ShareTweetSendShare
Previous Post

புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!

Next Post

ஓணம் பண்டிகை – குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் வாழ்த்து!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies