பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க.வின் நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்!

2024 மக்களவைத் தேர்தலில் கட்சி அதிகபட்ச வாக்குகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பா.ஜ.க. நாடு தழுவிய வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக  பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே, மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்காக  பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.

இதற்காக, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. முதலில் மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தலில் இதே யுத்தியை பா.ஜ.க. கையில் எடுத்தது. இது நல்ல பலனைக் கொடுக்கவே, தற்போது தேசிய அளவிலான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறது.

இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தின்போது, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இடம் பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறிந்து சேர்ப்பது, உயிரிழந்த, சந்தேகத்திற்குரிய மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவகாரங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளைப் பா.ஜ.க.வினர் மேற்கொள்வார்கள்.

இதற்காக பூத் கமிட்டி வரை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரசாரத்தின்போது பா.ஜ.க.வினர் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்வார்கள்.

மேலும், இப்பிரசாரத்தின்போது மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 20,000 வாக்காளர்களையும், நகராட்சி பகுதிகளில் 10,000 வாக்காளர்களையும், ஒன்றியப் பகுதிகளில் 5,000 வாக்காளர்களையும் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்த பிரசாரப் பொறுப்பு, பா.ஜ.க. இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்பணியை கவனிப்பதற்காக பா.ஜ.க. இணைப் பொதுச்செயலாளர் (அமைப்பு) சிவபிரகாஷ் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில் பா.ஜ.க. தேசியப் பொதுச்செயலாளர்கள் குமால் சஞ்சய் பாண்டே, துஷ்யந்த் கவுதம், துணைத்தலைவர்கள் லஷ்மிகாந்த் வாஜ்பாய், ரேகா வர்மா, தேசியச் செயலாளர்கள் சத்யகுமார், காமகிய பிரசாத் தாசா, பாரதிய கிஷான் மோர்ச்சா தலைவர் ராஜ்குமார் சாஹா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 6 மாநிலங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது

Tags: bjpvoters awareness
ShareTweetSendShare
Previous Post

புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!

Next Post

ஓணம் பண்டிகை – குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் வாழ்த்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies