அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா அத்துமீறி உள்ளது.

இந்தியா – சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டு யுத்தத்தின்போது கணிசமானப் பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அப்பகுதிக்கு அக்ஷாய் சின் என்று பெயர் சூட்டியது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசம் தங்களது நிலப்பகுதி என்றும், அது தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதன் பிறகும், அண்டை நாடானா சீனா, நமது நாட்டின் எல்லையில் அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறு நுழைந்து நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், லடாக் எல்லையில் நமது இராணுவம் கூடுதல் படைகளை குவித்திருக்கிறது.

இதையடுத்து, இரு நாட்டு நல்லுறவு குறித்து சீனாவிடம் இந்திய தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபரிடம் ஜி ஜின் பிங்கிடம் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், சீனா அடங்குவதாக இல்லை. இந்த நிலையில்தான், சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த வரைபடத்தில், சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்ஷாய் சின் என்றும், அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில், இந்திய நிலப்பகுதி மட்டுமல்லாது தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் சீனா தங்களுடைய பகுதி என்று உரிமை கோரி இருக்கிறது. மேலும், சீனா தென் சீனக் கடலில் பெரும் பகுதியை தனது நிலம் என்று கூறியிருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோல ஒரு வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதிலும், அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுடைய நிலம் என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதை தங்களது நாட்டு மக்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளை தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதற்கு மேற்கண்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiachina
Share
Tweet
SendShare
Previous Post

என்.டி.இராமாராராவ் நூற்றாண்டு! – நினைவு நாணயம் வெளியீடு!

Next Post

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies