அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!
Jul 28, 2026, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல், லடாக் எங்களுக்குச் சொந்தம்: புதிய வரைபடம் வெளியிட்ட சீனா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா அத்துமீறி உள்ளது.

இந்தியா – சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டு யுத்தத்தின்போது கணிசமானப் பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அப்பகுதிக்கு அக்ஷாய் சின் என்று பெயர் சூட்டியது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசம் தங்களது நிலப்பகுதி என்றும், அது தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதன் பிறகும், அண்டை நாடானா சீனா, நமது நாட்டின் எல்லையில் அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறு நுழைந்து நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், லடாக் எல்லையில் நமது இராணுவம் கூடுதல் படைகளை குவித்திருக்கிறது.

இதையடுத்து, இரு நாட்டு நல்லுறவு குறித்து சீனாவிடம் இந்திய தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபரிடம் ஜி ஜின் பிங்கிடம் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், சீனா அடங்குவதாக இல்லை. இந்த நிலையில்தான், சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த வரைபடத்தில், சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்ஷாய் சின் என்றும், அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில், இந்திய நிலப்பகுதி மட்டுமல்லாது தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் சீனா தங்களுடைய பகுதி என்று உரிமை கோரி இருக்கிறது. மேலும், சீனா தென் சீனக் கடலில் பெரும் பகுதியை தனது நிலம் என்று கூறியிருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோல ஒரு வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதிலும், அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுடைய நிலம் என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதை தங்களது நாட்டு மக்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளை தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதற்கு மேற்கண்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiachina
ShareTweetSendShare
Previous Post

என்.டி.இராமாராராவ் நூற்றாண்டு! – நினைவு நாணயம் வெளியீடு!

Next Post

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies