செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுப்புத் தெரிவித்து விட்டதால், என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து வருகிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள்.

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இருதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை, 5 நாட்கள் விசாரணைக்குப் பிறகு 12-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவரது சிறைக்காவல் கடந்த 25-ம் தேதி நிறைவடைந்தது.

இதனிடையே, செந்தில் பாலாஜி மாநில அமைச்சராக இருப்பதால், அவரது வழக்கை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 25-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியை, 28-ம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவசங்கர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, 28-ம் தேதி செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர்.

ஆனால், அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில், ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய நீதிபதி ரவி, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி இருந்தார். மேலும், செந்தில் பாலாஜியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பர் 15-ம் தேதிவரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள், ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு பட்டியலுக்கு வராத நிலையில், பட்டயலுக்கு வரட்டும் பார்க்கலாம் என்று நீதிபதி அல்லி கூறியிருந்தார். இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று பட்டியலுக்கு வந்த நிலையில், மேற்கண்ட வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது, சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள், அவசர அவசரமாகச் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஓடினர். அங்கு ஜாமீன் கோரி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியிடம் மனு தாக்கல் செய்தனர். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது. இந்த மனுவை விசாரிக்கும் அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உள்ளதா என்பது உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஆகவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தினார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 

 

Tags: dmk senthil balajiit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 

Next Post

திண்டுக்கல்: 35 வருடங்களுக்குப் பிறகு களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies