2023 ஆசியா கோப்பைத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மொத்தமாக ஆசியாவில் உள்ள ஆறு அணிகள் இந்த தொடரில் மோதவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இந்த தொடரில் பங்குபெறவுள்ளது. இந்த போட்டியில் குரூப் எ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் எ-வில் இந்தியா, பகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் பி-யில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் மோதவுள்ளன.
இந்த போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் சேர்ந்து நடத்தவுள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் உள்ள 4 மைதானங்களில் போட்டி நடைபெறவுள்ளது.
இன்று இந்த போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் நடைபெறவுள்ளது. இதில் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியை செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் மோதவுள்ளது.