ஆசியா உலகக்கோப்பை 2023 யின் முதல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் நேபாளம் தோல்வியடைந்துள்ளது.
ஆசியா உலக கோப்பையின் முதல் போட்டி நேற்று பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குரூப் ‘எ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினார்கள். ஐந்தாவது ஓவரில் ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை இழந்தார். அவருக்கு தொடர்ந்து 6 வது ஓவரிலே இமாம்-உல்-ஹக் ரன் அவுட் ஆகனார். அடுத்ததாக களமிறங்கிய பாபர் அசாம் தனது ஆட்டத்தை அதிரடியாக காண்பித்து 151(131) ரன்களை எடுத்தார். இதுவே அணியின் அதிக பட்ச ரன்களாக இருந்தது.
இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது 109(71) ரன்களை எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 44 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 342/6 ஆக இருந்தது. நேபாளம் அணியில் அதிகமாக சோம்பால் கமி 2 விக்கெட்களை எடுத்தார்.
பாகிஸ்தான் அணியின் அதிரடியான ஆட்டத்தைக் கண்டு மிரண்டு போயிருந்த நேபாளம் அணி 343 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
நேபாளத்தின் தொடக்க வீரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே குஷால் புர்டெல் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரோஹித் பவுடல் அடுத்த பந்திலே டௌக் அவுட் ஆகினார். இதே போன்று தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருக்க 24 வது ஓவர் முடிவில் நேபாளம் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷதாப் கான் 4 விக்கெட்களை எடுத்தார். ஹரிஸ் ரவூப் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆளுக்கு 2 விக்கெட்களும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான, 151 ரன்களை அடித்த பாபர் அசாம்முக்கு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது மிக சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இரசிகர்களிடம் பெரும் கேள்வியாக உள்ளது.