இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  
Jul 26, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  

Web Desk by Web Desk
Sep 2, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31, 2023 அன்று ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (கியூ.சி.ஓ) சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இந்த மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சுரங்க அமைச்சகத்தின் முதல் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளைக் குறிக்கின்றன.

அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகளுக்கான கியூ.சி.ஓ அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவையின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு பொருத்தமான இந்திய தரநிலைகளின் (ஐ.எஸ்) கீழ்  சான்றிதழைக் கட்டாயப்படுத்துகிறது. உயர் தூய்மை முதன்மை அலுமினியம், தாங்கிகளுக்கான அலுமினிய உலோகக் கலவைகள், மறுசுழற்சி செய்வதற்கான முதன்மை அலுமினிய இங்கோட்டுகள், அலுமினிய இங்கோட்கள், பில்லெட்டுகள் மற்றும்  கம்பிகள் ஆகியவை இதில் அடங்கும். மீதமுள்ள இரண்டு கியூ.சி.ஓக்கள் தாமிரம் மற்றும் நிக்கல் தூளுக்கு பொருத்தமான ஐ.எஸ் தரங்களை வழங்குகின்றன.

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) மற்றும் தொடர்புடைய தொழில் சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மூன்று தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் உறுப்பு நாடுகளிடமிருந்து கருத்துக்களைக் கோருவதற்காக 60 நாள் காலத்திற்கு வரைவு கியூ.சி.ஓக்களை உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) வலைத்தளத்தில் வெளியிடுவது, 60 நாட்களுக்குள் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற அமைச்சகத்தின் வலைத்தளத்தில் பதிவிடுவது ஆகியவை மேற்கொள்ளப்படும்.

அதைத் தொடர்ந்து, மத்திய சுரங்கத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு கியூ.சி.ஓ.க்கள் இறுதி செய்யப்பட்டு, சட்டத் துறையின் பரிசீலனை செய்யப்படும்.

நாட்டில் இரும்பு அல்லாத உலோகத் துறைக்கான தரக் கட்டுப்பாட்டுச் சூழலை வலுப்படுத்த சுரங்க அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக, இரும்பு அல்லாத உலோக மதிப்பு சங்கிலியில் மேல்நிலை தயாரிப்புகள் (சுத்திகரிக்கப்பட்ட உலோகம்) மீது அதிக கியூ.சி.ஓக்களை தயாரிக்க அமைச்சகம் பி.ஐ.எஸ் உடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

தரமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், தொழில்துறை பயனர்கள் உட்பட உள்நாட்டு நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதை இந்த உத்தரவுகள் உறுதிப்படுத்த உதவுகிறது.

அலுமினிய உலோகம் மற்றும் உலோகக் கலவைகள், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தரத்தை பயனர் தொழில்துறையின் நன்மைக்காக உறுதி செய்யும். அதே நேரத்தில், கியூ.சி.ஓ.க்கள் இந்த பொருட்களில் இந்திய தயாரிப்புத் தரத்தை உலகத் தரத்திற்கு ஏற்ப உறுதி செய்வதோடு, சர்வதேச சந்தையில் ‘மேக் இன் இந்தியா’ பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் நோக்கில் சுரங்க அமைச்சகத்தின் பல முன்முயற்சிகளில் கியூ.சி.ஓ அறிவிப்புகளும் ஒன்றாகும்.

Tags: central governmentministery of mines
ShareTweetSendShare
Previous Post

கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!

Next Post

பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு :

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies