இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  
Jan 14, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரும்பு அல்லாத 7 உலோகப் பொருட்களுக்கு 3 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள்: மத்திய அரசு அறிவிப்பு!  

Murugesan M by Murugesan M
Sep 2, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31, 2023 அன்று ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (கியூ.சி.ஓ) சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இந்த மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சுரங்க அமைச்சகத்தின் முதல் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளைக் குறிக்கின்றன.

அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகளுக்கான கியூ.சி.ஓ அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவையின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு பொருத்தமான இந்திய தரநிலைகளின் (ஐ.எஸ்) கீழ்  சான்றிதழைக் கட்டாயப்படுத்துகிறது. உயர் தூய்மை முதன்மை அலுமினியம், தாங்கிகளுக்கான அலுமினிய உலோகக் கலவைகள், மறுசுழற்சி செய்வதற்கான முதன்மை அலுமினிய இங்கோட்டுகள், அலுமினிய இங்கோட்கள், பில்லெட்டுகள் மற்றும்  கம்பிகள் ஆகியவை இதில் அடங்கும். மீதமுள்ள இரண்டு கியூ.சி.ஓக்கள் தாமிரம் மற்றும் நிக்கல் தூளுக்கு பொருத்தமான ஐ.எஸ் தரங்களை வழங்குகின்றன.

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) மற்றும் தொடர்புடைய தொழில் சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மூன்று தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் உறுப்பு நாடுகளிடமிருந்து கருத்துக்களைக் கோருவதற்காக 60 நாள் காலத்திற்கு வரைவு கியூ.சி.ஓக்களை உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) வலைத்தளத்தில் வெளியிடுவது, 60 நாட்களுக்குள் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற அமைச்சகத்தின் வலைத்தளத்தில் பதிவிடுவது ஆகியவை மேற்கொள்ளப்படும்.

அதைத் தொடர்ந்து, மத்திய சுரங்கத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு கியூ.சி.ஓ.க்கள் இறுதி செய்யப்பட்டு, சட்டத் துறையின் பரிசீலனை செய்யப்படும்.

நாட்டில் இரும்பு அல்லாத உலோகத் துறைக்கான தரக் கட்டுப்பாட்டுச் சூழலை வலுப்படுத்த சுரங்க அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக, இரும்பு அல்லாத உலோக மதிப்பு சங்கிலியில் மேல்நிலை தயாரிப்புகள் (சுத்திகரிக்கப்பட்ட உலோகம்) மீது அதிக கியூ.சி.ஓக்களை தயாரிக்க அமைச்சகம் பி.ஐ.எஸ் உடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

தரமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், தொழில்துறை பயனர்கள் உட்பட உள்நாட்டு நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதை இந்த உத்தரவுகள் உறுதிப்படுத்த உதவுகிறது.

அலுமினிய உலோகம் மற்றும் உலோகக் கலவைகள், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தரத்தை பயனர் தொழில்துறையின் நன்மைக்காக உறுதி செய்யும். அதே நேரத்தில், கியூ.சி.ஓ.க்கள் இந்த பொருட்களில் இந்திய தயாரிப்புத் தரத்தை உலகத் தரத்திற்கு ஏற்ப உறுதி செய்வதோடு, சர்வதேச சந்தையில் ‘மேக் இன் இந்தியா’ பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் நோக்கில் சுரங்க அமைச்சகத்தின் பல முன்முயற்சிகளில் கியூ.சி.ஓ அறிவிப்புகளும் ஒன்றாகும்.

Tags: central governmentministery of mines
ShareTweetSendShare
Previous Post

கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!

Next Post

பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு :

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies