யானைகள் வழித்தடம் விவகாரம் - 90 நாள் கெடு!
Sep 7, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு விவசாய நிலங்கள் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள சீகூர் பள்ளத்தாக்கில் உள்ள மாவனல்லா, பொக்காவரம், சோலூர், மாயார் மற்றும் வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடமாக இருந்தன.

இந்த பகுதியில் விதிமுறைகளை மீறி, ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டன. இதனால், அந்த பகதியில் யானைகள் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. யானைகள் உணவுக்காக வழிமாறிச் செல்கின்றன என புகார் எழுந்தது.

இதனால், இந்த சுற்றுலா விடுதிகளை உடனே அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, 2010 -ம் ஆண்டு யானைகள் வழித்தடம் குறித்து, தமிழக அரசு வரைபடம் வெளியிட்டது. கூடவே, அரசாணையும் வெளியிட்டது.

இதற்கு எதிராக, சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக, 39 கட்டிடங்கள் மற்றும் 310 அறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து, ஒருசில கட்டிட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் 2020 -ல் யானைகள் வழித்தடம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெற்று விசாரணை நடத்தியது.

யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டிடம் மற்றும் விவசாயம் செய்து வரும் 27 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், 1991 -ம் ஆண்டு, தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பு இடங்களை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Next Post

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Related News

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies