யானைகள் வழித்தடம் விவகாரம் - 90 நாள் கெடு!
Jun 24, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 09:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு விவசாய நிலங்கள் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள சீகூர் பள்ளத்தாக்கில் உள்ள மாவனல்லா, பொக்காவரம், சோலூர், மாயார் மற்றும் வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடமாக இருந்தன.

இந்த பகுதியில் விதிமுறைகளை மீறி, ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டன. இதனால், அந்த பகதியில் யானைகள் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. யானைகள் உணவுக்காக வழிமாறிச் செல்கின்றன என புகார் எழுந்தது.

இதனால், இந்த சுற்றுலா விடுதிகளை உடனே அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, 2010 -ம் ஆண்டு யானைகள் வழித்தடம் குறித்து, தமிழக அரசு வரைபடம் வெளியிட்டது. கூடவே, அரசாணையும் வெளியிட்டது.

இதற்கு எதிராக, சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக, 39 கட்டிடங்கள் மற்றும் 310 அறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து, ஒருசில கட்டிட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் 2020 -ல் யானைகள் வழித்தடம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெற்று விசாரணை நடத்தியது.

யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டிடம் மற்றும் விவசாயம் செய்து வரும் 27 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், 1991 -ம் ஆண்டு, தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பு இடங்களை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Next Post

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies