யானைகள் வழித்தடம் விவகாரம் - 90 நாள் கெடு!
Aug 8, 2026, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 09:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு விவசாய நிலங்கள் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள சீகூர் பள்ளத்தாக்கில் உள்ள மாவனல்லா, பொக்காவரம், சோலூர், மாயார் மற்றும் வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடமாக இருந்தன.

இந்த பகுதியில் விதிமுறைகளை மீறி, ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டன. இதனால், அந்த பகதியில் யானைகள் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. யானைகள் உணவுக்காக வழிமாறிச் செல்கின்றன என புகார் எழுந்தது.

இதனால், இந்த சுற்றுலா விடுதிகளை உடனே அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, 2010 -ம் ஆண்டு யானைகள் வழித்தடம் குறித்து, தமிழக அரசு வரைபடம் வெளியிட்டது. கூடவே, அரசாணையும் வெளியிட்டது.

இதற்கு எதிராக, சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக, 39 கட்டிடங்கள் மற்றும் 310 அறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து, ஒருசில கட்டிட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் 2020 -ல் யானைகள் வழித்தடம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெற்று விசாரணை நடத்தியது.

யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டிடம் மற்றும் விவசாயம் செய்து வரும் 27 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், 1991 -ம் ஆண்டு, தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பு இடங்களை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags: elephant
Share
Tweet
SendShare
Previous Post

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Next Post

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Related News

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies