இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!
Aug 8, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 09:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான பிரபுநாத் சிங், தனது ஆதரவாளர்களுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், தரோகா ராய், ராஜேந்திர ராய், ஸ்ரீமதி தேவி ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். இவர்களில் தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். ஸ்ரீமதி தேவி படுகாயமடைந்தார். இதுகுறித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் சரண் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபுநாத் சிங் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு பாட்னா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததாகக் கூறி பிரபுநாத் சிங் 2008-ல் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே பாட்னா உயர் நீதிமன்றமும் 2012-ல் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில்தான் பிரபுநாத் சிங் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும், பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டுத் தொகையை பீகார் மாநில அரசும், குற்றவாளியும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: lalu prasad yadavbihar mprjd partysupreme court
Share
Tweet
SendShare
Previous Post

மாதிரி வாக்கெடுப்பு: 70% வாக்குகளுடன் தர்மன் முன்னிலை!

Next Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Related News

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies