இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!
Jun 24, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கு: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 09:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான பிரபுநாத் சிங், தனது ஆதரவாளர்களுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், தரோகா ராய், ராஜேந்திர ராய், ஸ்ரீமதி தேவி ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். இவர்களில் தரோகா ராய், ராஜேந்திர ராய் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். ஸ்ரீமதி தேவி படுகாயமடைந்தார். இதுகுறித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர் தரப்பில் அளித்த புகாரின் பேரில் சரண் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபுநாத் சிங் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு பாட்னா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததாகக் கூறி பிரபுநாத் சிங் 2008-ல் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே பாட்னா உயர் நீதிமன்றமும் 2012-ல் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில்தான் பிரபுநாத் சிங் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும், பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டுத் தொகையை பீகார் மாநில அரசும், குற்றவாளியும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Tags: supreme courtlalu prasad yadavbihar mprjd party
ShareTweetSendShare
Previous Post

மாதிரி வாக்கெடுப்பு: 70% வாக்குகளுடன் தர்மன் முன்னிலை!

Next Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies