ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !
Jan 14, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !

நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு 4ஆம் தேதி விசாரிக்கிறது. .

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, யார் விசாரிப்பது என்பது தொடர்பான மனு, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இவரது வழக்கை விசாரித்து வந்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவ்வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியோ, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது. சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

எனவே, செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியோ, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஆகவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பு முறையிடப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் இருந்து ஏற்கெனவே நீதிபதி சக்திவேல் விலகி விட்டதால், இம்மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி சுந்தர், மேற்கண்ட மனுவை யார் விசாரிப்பது என்பது தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். ஆகவே, தலைமை நீதிபதியை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஆனால், தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருப்பதால், செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதன் பிறகுதான், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தெரியவரும்.

Tags: it raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபரான தமிழருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies