ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !
Jul 26, 2025, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !

நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு 4ஆம் தேதி விசாரிக்கிறது. .

Web Desk by Web Desk
Sep 2, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, யார் விசாரிப்பது என்பது தொடர்பான மனு, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இவரது வழக்கை விசாரித்து வந்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவ்வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியோ, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது. சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

எனவே, செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியோ, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஆகவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பு முறையிடப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் இருந்து ஏற்கெனவே நீதிபதி சக்திவேல் விலகி விட்டதால், இம்மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி சுந்தர், மேற்கண்ட மனுவை யார் விசாரிப்பது என்பது தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். ஆகவே, தலைமை நீதிபதியை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஆனால், தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருப்பதால், செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதன் பிறகுதான், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தெரியவரும்.

Tags: it raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபரான தமிழருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies