ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !
Jul 29, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாமீன் கேட்டு கோர்ட் கோர்ட்டாக அலையும் செந்தில் பாலாஜி !

நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு 4ஆம் தேதி விசாரிக்கிறது. .

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, யார் விசாரிப்பது என்பது தொடர்பான மனு, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இவரது வழக்கை விசாரித்து வந்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவ்வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியோ, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது. சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

எனவே, செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியோ, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஆகவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பு முறையிடப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் இருந்து ஏற்கெனவே நீதிபதி சக்திவேல் விலகி விட்டதால், இம்மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி சுந்தர், மேற்கண்ட மனுவை யார் விசாரிப்பது என்பது தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். ஆகவே, தலைமை நீதிபதியை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஆனால், தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருப்பதால், செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதன் பிறகுதான், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தெரியவரும்.

Tags: it raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபரான தமிழருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கோவை கார் குண்டு வெடிப்பு: முக்கிய தீவிரவாதி கைது!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies