செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Aug 19, 2025, 11:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 4, 2023, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறையால் கைதுச் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைச் சிறப்பு நீதிமன்ற அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதலில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், மேற்கண்ட வழக்கு சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு என்பதால், அந்த மனுவை விசாரிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

உடனே செந்தில் பாலாஜி, முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடிநாடினார். ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தையே நாடுமாறு அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடினர். அதற்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதியோ, அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆகவே, உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டு வாருங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக நீதிபதி சக்திவேல் செப்டம்பர் 02ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? என்பது குறித்து முடிவு செய்ய நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 78 நாட்களாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் அவர்மீதான விசாரணை கடந்து விட்டதாகவும், மறு விசாரணைத் தேவையல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில், ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

மத்திய வருவாய் மற்றும் நிதித்துறை அறிக்கையில் பிரிவு 43ன் படி சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டு முதல் தற்போது 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

சிறப்பு நீதிமன்றங்களில் 1 மற்றும் 2 நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கான அதிகாரமும், 3வது நீதிமன்றம் நடுவர் நீதிமன்றத்துக்கான அதிகாரத்துடன் செயல்படுகிறது. அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இயங்கும் மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுகின்றன.

சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம் 4ன் படி தண்டனைக்கு உரிய குற்றத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவுச் செய்துள்ளது. அதன்படி, பிரிவு 43(1)ன்படி சிறப்பு அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முழு அதிகாரம் உள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: it raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோ இயக்குனரான தமிழ பெண் !

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies