திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 
Jun 14, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா – கொடியேற்றம். 

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை என போற்றப்படுவது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

இந்த திருக்கோவிலில் நடைபெறக் கூடிய விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவில், ஆவணி திருவிழாவும் ஒன்று. இந்த விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.

தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும், இந்த ஆவணி திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தளி, வீதி உலா வருவது வழக்கம்.

ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை, ஒரு மணிக்கு, திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் தரிசனம் நடைபெற்றது.

பின்னர், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது, பக்தர்கள், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில், இன்று, அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் திருக்கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கொடி மரத்திற்கு பால், பழம், பன்னீர், திராட்சை, மஞ்சள், தயிர் உள்ளிட 16 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், கொடிமரம் தர்பைபுல், ரோஜா உள்ளிட்ட மலர்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tiruchendur templelord murugan
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோவிலில் மகா பாலாலயம் பூஜை.

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies