திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசியிருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு, நாடு முழுவதும் இந்துக்களிடமிருந்து கடும் கண்டனம் எழுந்தது. தேசியக் கட்சியான பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, காஷ்மீர் மன்னராக இருந்த ஹரி சிங்கின் மகனும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான கரண் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனம் அழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த நாட்டில் உள்ள ஏராளமான பொது மக்கள் சனாதனத்தைப் பின்பற்றி வருகிறார்கள். அது தொகையில் கூடுதலாகவும் இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். அதைப்பறி நான் கருத்து சொல்லவில்லை. ஆனால், ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் கருத்தாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
உலகத்திலேயே, தமிழகத்தில்தான் சனாதன தர்மம் நிறைந்த கோவில்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், சிதம்பரம், மதுரை, சுசீந்திரம் என சொல்லிக் கொண்டே பேகாலம்.
எனவே, அமைச்சர் உதயநிதியின் கருத்தை நான் எதிர்க்கின்றேன். கண்டிக்கிறேன் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.