புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!
Sep 10, 2025, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புழல் சிறையில் கஞ்சா சப்ளை செய்யும் காவலர்– அதிர்ச்சிப் பின்னணி!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்துள்ள புழல் சிறையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரை உள்ளிட்டவைகளை சப்ளைச் செய்தக் காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்த ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து, மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

புகாரின் பேரில் அந்த நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஆல்வின் அறையில் சிறைத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனைப் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், சிறைக் காவலர் திருமலை நம்பிராஜன் என்பவர்,
கடந்த சில மாதங்களாகவே, கைதிகளுக்குப் போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, புழல் காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார், சிறை காவலர் திருமலை நம்பிராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் சிறையில், சட்டத்தை பாதுகாக்கும் காவலர் ஒருவர், சட்டவிரோதமாகப் போதை மாத்திரை, கஞ்சா சப்ளைச் செய்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: central jail
ShareTweetSendShare
Previous Post

தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்!

Next Post

அண்ணாமலை ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies